ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 15 மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அமேசான் மற்றும் பல்வேறு முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் ஆப்பிள் இந்தியா ஐஸ்டோரில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க சலுகையாக ஐபோன் 15 மாடலை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. தற்போது ஆப்பிள் இந்தியா ஐஸ்டோரில் ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 74,600 என துவங்குகிறது. இது அதன் உண்மை விலையான ரூ. 79,600-ஐ விட குறைவு ஆகும். அந்த வகையில், ஐஸ்டோரில் இந்த மாடலுக்கு ரூ. 5000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 விலை ரூ. 70,600 என மாறிவிடும். முதல் முறை ஐபோன் வாங்குவோர் இந்த விலையில் புதிய ஐபோன் 15-ஐ வாங்கிட முடியும்.
ஆனால், ஏற்கனவே ஐபோன் 12 வைத்திருப்பவர்கள் தற்போது ஐபோன் 15 மாடலை கிட்டத்தட்ட பாதி விலைக்கு வாங்கிட முடியும். இந்தியா ஐஸ்டோரில் ஐபோன் 15 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20,000 வரை எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஐபோன் 12 மாடலுக்கு பொருந்தும். இத்துடன் ரூ. 6000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் 15 இறுதி விலை ரூ. 44,600 என மாறிவிடும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 15 மாடலில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 48MP பிரைமரி கேமரா, ஸ்மார்ட் HDR மோட், 4K வீடியோ வசதி, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ட்ரூடெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஏ16 பயோனிக் சிப்செட், நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி திறன் வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…