ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஐபோன் 16 மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும். புதிய ஐபோன்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில், புதிய ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் அசெம்பில் செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ப்ரோ சீரிஸ் மாடல்கள் இவை ஆகும். செப்டம்பர் மாதம் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமான சில வாரங்களுக்குள் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அசெம்பில் செய்ய துவங்கும் என்று தெரிகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் திட்டம் விரிவடையும். புதிய ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவில் வெய்போ தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் ஸ்டிக்கரிங் இடம்பெற்றுள்ளது.
அந்த ஸ்டிக்கரில் “ஐபோன் 16 ப்ரோ, டிசைன்டு பை ஆப்பிள் இன் கலிபோர்னியா, அசெம்பில்டு இன் இந்தியா” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஜூலை மாதம் வெளியான தகவல்களில் ஆப்பிள் வினியோகஸ்தரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மாடல்களை தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் அசெம்பில் செய்ய இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
முதற்கட்டமாக ஏற்றுமதி செய்யப்படும் யூனிட்களை வைத்து ஆப்பிள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும். அதன்பிறகு செப்டம்பர் மாத மத்தியில் புதிய ஐபோன்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து அவற்றை அசெம்பில் செய்யும் பணிகள் துவங்கும். இந்தியாவில் ஐபோனின் ப்ரோ வேரியண்ட்கள் இந்தியாவில் அசெம்பில் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…