ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸின் வெளியீட்டில் மட்டும் திட்டவட்டமாக அட்டவணையை பின்பற்றுவதில்லை. இதற்கான காரணம் போன்றே, புது ஐபோன் SE மாடல் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளன. கடைசியாக கடந்த 2022 ஆண்டு ஐபோன் SE மூன்றாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி வரும் ஐபோன் SE 4 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் 6.06 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டிப்ஸ்டர் ஐஸ் யூனிவர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஐபோன் SE 4 மாடலின் விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில் புதிய ஐபோன் SE 4 விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 42,000 என்று துவங்கும் என்றும் டாப் எண்ட் மாடல் விலை 549 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 46,000 என நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2022 ஐபோன் SE மாடலின் விலை 429 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 6.06 இன்ச் OLED பேனல், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல்முறையாக ஐபோன் SE சீரிஸ் மாடலில் OLED பேனல் வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன் புதிய ஐபோன் SE சீரிஸ் மாடலில் ஆப்பிள் A18 சிப்செட், 6GB மற்றும் 8GB ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…