Connect with us

latest news

ஐஒஎஸ் 17 உடன் வரும் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் – இதெல்லாம் தெரியுமா?

Published

on

IOS-17-featured-img

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷன் மூலம் ஐபோன்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கிறது. இதில் பெரும்பாலான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்தமான பிரவுசர் சஃபாரி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டு உள்ளன. ஐபோன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் முற்றிலும் புதிய ஐஒஎஸ் 17 தற்போது அதன் பீட்டா வெர்ஷனில் உள்ளது.

முதற்கட்டமாக ஐஒஎஸ் 17 வெர்ஷன் பீட்டா வடிவில் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்குமான அப்டேட் இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாத வாக்கில் புதிய ஒஎஸ் ஸ்டேபில் வெர்ஷனை வெளியிடுவதை ஆப்பிள் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில், புதிய ஐஒஎஸ் 17-இல் ஆப்பிள் வழங்க இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் எவை என்று தொடர்ந்து பார்ப்போம்.

கம்யூனிகேஷன் சேஃப்டி :

ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலான செயலிகளில் கம்யூனிகேஷன் சேஃப்டி (communication safety) வசதியை நீட்டிக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் சட்ட விரோத புகைப்படம் அல்லது வீடியோக்களை ஏர்டிராப் அல்லது ஐமெசேஜ் மூலம் பெறாமல் இருக்க முடியும். நிர்வான புகைப்படம் அல்லது வீடியோக்களில் தானாக உள்ளாடை அணிவிக்கவும், உடலின் பிறப்பு உறுப்புகள் சென்சார் செய்யப்பட்டு விடும் என்று ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

iOS-17-Communication-Safety

iOS-17-Communication-Safety

ஐஒஎஸ் 17, ஐபேட் ஒஎஸ் 17 மற்றும் மேக்ஒஎஸ் சொனோமாவில் புதிய கம்யூனிகேஷன் சேஃப்டி அம்சம் தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய, செட்டிங்ஸ் — ஸ்கிரீன் டைம் — கம்யூனிகேஷன் சேஃப்டி ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆட்டோ டெலீட் வெரிஃபிகேஷன் கோட் :

ஒன்-டைம் பாஸ்வேர்டுகளை (ஒ.டி.பி.) தவறாக பயன்படுத்துவது பொதுவாகவே கடினமான காரியம் ஆகும். எனினும், முழுமையான பாதுகாப்பு வழங்க அவற்றை டெலீட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். எனினும், ஒ.டி.பி.-க்களை டெலிட் செய்வது சிக்கலான மற்றும் எரிச்சலான காரியம் ஆகும்.

iOS-auto-delete-otp

iOS-auto-delete-otp

இதற்கு முடிவு கட்டும் வகையில், ஆப்பிள் நிறுவனம் வெரிஃபிகேஷன் கோட்களை தானாக அழிந்து போக செய்யும் வசதியை வழங்குகிறது. தற்போதைய ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பது அவசியம் ஆகும். இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — பாஸ்வேர்டு — பாஸ்வேர்டு ஆப்ஷன் — கிளீன் அப் ஆட்டோமேடிக்கலி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்.

போட்டோ பிரைவசி பெர்மிஷன் :

ஐபோன் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களை செயலிகள் முழுமையாகவோ அல்லது ஒருபகுதியாகவோ இயக்குவதற்கு அனுமதி வழங்க முடியும். ஐஒஎஸ் 17 மூலம், பயனர்கள் இதே அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். கூடுதலாக எந்தெந்த செயலிகளுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ரிமைன்டர் வழங்க செய்யலாம்.

iOS-Photos-privacy-permissions

iOS-Photos-privacy-permissions

இந்த அம்சத்தை செயல்படுத்தவும், நீக்குவதற்கும் எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் ஐஒஎஸ் 17-இல் தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

சஃபாரி பிரைவேட் பிரவுசிங் :

ஆப்பிள் சஃபாரி பிரவுசர் ‘பிரைவேட்’ பிரவுசிங் வசதியை வழங்குகிறது. இது கூகுள் க்ரோம் பிரவுசரில் உள்ள இன்காக்னிட்டோ மோட் போன்ற அம்சம் ஆகும். புதிய ஐஒஎஸ் 17-இல் பிரைவேட் பிரவுசிங்கில் உள்ள டேப்கள் தானாக லாக் செய்யப்பட்டு விடும்.

iOS-Safari-Private-browsing

iOS-Safari-Private-browsing

இதன் மூலம் மற்றவர்கள் பயனர் ஐபோன் பயன்படுத்தும் போது, பயனர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை போக்க முடியும். இந்த அம்சம் மேக் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் செட்டிங்ஸ் — சஃபாரி — பிரைவேட் பிரவுசிங்கை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐடி-ஐ செயல்படுத்தக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சஃபாரி அட்வான்ஸ்டு டிராக்கிங் :

சஃபாரி பிரவுசரில் வழங்கப்படும் மற்றொரு பாதுகாப்பு அம்சம் அட்வான்ஸ்டு டிராக்கிங். இதை கொண்டு பயனர்கள் யு.ஆர்.எல்.-களில் உள்ள டிராக்கர்களை தவிர்க்க செய்கிறது. இந்த டிராக்கர்கள் பயனர் லொகேஷன் அல்லது சாதனத்தின் விவரங்களை அம்பலப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.

 

இந்த அம்சத்தை செயல்படுத்த செட்டிங்ஸ் — அட்வான்ஸ்டு — அட்வான்ஸ்டு டிராக்கிங் அன்ட் ஃபிங்கர்-ப்ரின்ட் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செட்டிங்கை பிரைவேட் பிரவுசிங் மற்றும் ஆல் பிரவுசிங் உள்ளிட்டவைகளில் செயல்படுத்த முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்… ஆனா இன்னும் இத்தனை கோடி வரவில்லையாம்… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி

Published

on

By

இந்திய மக்கள் ஒரே இரவில் கலங்கி நின்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தான். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தனர்.

அந்த நோட்டில் பல வியூகங்கள் இருப்பதாகவும், சிப் இருப்பதாகவும் பலர் கிசுகிசுத்தனர். இதனை தொடர்ந்து பிங்க் கலரில் 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. வங்கிகள் என பல இடங்களில் இருந்த 2000 நோட் சில நாட்களிலேயே காணாமல் போனது. ஒரு கட்டத்தில் மத்திய அரசே 2023ம் ஆண்டு மே19ந் தேதி 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

பொதுமக்கள் தங்களிடம் இருந்த 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்புகள் வந்தது. இதையடுத்து மக்களும் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிவந்தனர். இந்நிலையில் 97.87 சதவீத 2000 நோட்டுகள் திரும்பிவிட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

இருந்தும், 7,581 கோடி 2000 நோட்டுகள் இன்னமும் திரும்பவில்லை என தெரிவித்து இருக்கிறது. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு வரை எல்லா கிளைகளிலும் பணத்தினை மாற்ற வசதி அமைக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள் மட்டுமே 2000 ரூபாயை மாற்ற முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி பணத்தினை பெற்றுக்கொண்டு உரியவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Cricket

இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…

Published

on

By

ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி 17 வருடம் கழித்து பெற்று இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தோனி தலைமையிலான வெற்றிக்கு பின்னர் ரோஹித் இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று கொடுத்து இருக்கிறார்.

இவ்விரண்டு கோப்பைகளுக்கு முன்னர் இந்தியா கபில்தேவ் தலைமையிலான அணி இருந்த போது உலக கோப்பையை பெற்றது. மூன்று உலக கோப்பைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட இந்திய அணி தலை தூக்கி கொண்டு இருந்த காலகட்டம் அது. கவாஸ்கரை இறக்கிவிட்டு கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

ரொம்பவே ஏளனமாக பார்க்கப்பட்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இந்த முறையும் ஒன்னுமே இல்லாமல் தான் வருவார்கள் என கிசுகிசுத்தனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையை பொய்யாக்கி ஒவ்வொரு ஜாம்பவான் அணியை தட்டி தூக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த காலக்கட்டத்தில் இரண்டு கோப்பைகளை வைத்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய இந்திய அணி 183 இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தனர்.

அடுத்து இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தாலும் விவியன் ரிச்சர்ட் களத்தில் இருந்தார். மதன்லால் வீசிய அந்த பந்தை ரிச்சர்ட் தூக்கி அடிக்க அதை பின்னாலே ஓடிச்சென்ற கபில்தேவ் லாவகமாக பிடித்தார். அந்த கேட்ச் போட்டியை மாற்றியது. இந்தியாவிற்கு முதல் உலக கோப்பை கிடைக்க காரணமானது.

ஆனால் அந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்தியாவிற்கு பெரிய கோப்பை எதுவும் கிடைக்கவே இல்லை. பல ஜாம்பவான்கள் இருந்தாலும் உலக கோப்பையை ருசிக்க முடியாமல் போனது. 2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாடியது.

ஒவ்வொரு போட்டியிலும் சரியான கணிப்பில் இறங்கி பைனல் வரை சென்றது. இறுதியில் பாகிஸ்தானை சந்தித்தது. ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் இந்தியா பெற்றது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் பாகிஸ்தான் இறங்கியது. 

18 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் சேர்த்து ஒன்பது விக்கெட்களை பாகிஸ்தான் அணி இழந்து இருந்தது. கடைசி ஓவருக்கு ஜோகிந்தர் சர்மா கையில் பந்தை கொடுத்து தோனி வீச சொல்ல இது பலருக்கு ஆச்சரியத்தினை கொடுத்தது. ஆனால் அதற்கேற்ப அவர் வீசிய மூன்றாவது பந்தை மிஸ்பா அடிக்க ஸ்ரீசாந்த் கையில் லாவகமாக அமர்ந்தது.

2024 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி வெல்ல 30 பாலுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில் ஹர்திக் வீசிய பந்தை டேவிட் மில்லர் அடிக்க சிக்ஸ் கோட்டுக்குள் விழுந்த பந்தை சூர்யகுமார் யாதவ் பிடித்து வெளியில் எறிந்துவிட்டு பிடித்த கேட்ச் ஆட்டத்தினையே மாற்றி இந்தியாவுக்கு கப்பை பெற்று தந்தது. 

google news
Continue Reading

latest news

அடப்பாவி..! பசியால் அழுத 5 மாத குழந்தை.. தூக்கம் கெட்டதால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்…!

Published

on

விடியற்காலையில் 5 மாத பெண் குழந்தை தன்னை தூங்க விடாமல் அழுது கொண்டிருந்த காரணத்தால், தந்தையே அதை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உதகைப் பகுதியை சேர்ந்தவர் பிரேம், இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த குழந்தையை இருவரும் அதிக பாசத்துடன் பார்த்து வருகிறார்கள். பொதுவாக பச்சிளம் குழந்தைகள் நடு இரவு மற்றும் விடியற்காலையில் பசிக்கு அழுவது வழக்கம்தான்.

குழந்தை பிறந்தது முதலே தினமும் நடு ராத்திரியில் குழந்தை அழுவதால் பிரேம் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பிரேம் தினமும் விடியற்காலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும். இதனால் ராத்திரியில் தூக்கம் இல்லாததால் சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமலும் இருந்து கொண்டிருந்தார். எனவே வேலை செய்யும் இடத்திலும் பிரேமுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையின் நேற்று விடியற்காலை 4 மணி அளவில் குழந்தை பசிக்காக அழுத்திருக்கின்றது. அந்த சமயத்தில் அவரின் மனைவி ரம்யா தோட்டத்திற்கு சென்றிருந்ததால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இதனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்க தூக்கத்திலிருந்து விழித்த பிரேம் ஆத்திரத்தில் குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் குழந்தை உயிரிழந்து போனது.

இதை பார்த்து பயந்து போன பிரேம் இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்லாமலேயே வேலைக்கு கிளம்பி சென்று விட்டார். அதன் பிறகு ரம்யா வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்த போது வாயில் ரத்தத்துடன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தது. உடனே அவர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் குழந்தையின் தந்தை பிரேம் தான் குழந்தையை அடித்து கொன்றது தெரிய வந்திருக்கின்றது. இதனால் பிரேமை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news
Continue Reading

india

கடவுளை கேட்டுத்தான் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தாரா?!. விளாசிய ராகுல் காந்தி…

Published

on

modi

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல், கடந்த 2 தேர்தல்களிலும் மிகவும் குறைவான இடங்களை பிடித்த காங்கிரஸ் இப்போது அதிகமான இடங்களை பிடித்து எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

தனிக்கட்சியாக பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிற்து. இந்நிலையில், பாராளுமன்ற் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசியது அனல் பறந்தது. அவர் பேசியதாவ்வது:

என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளியது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும் அமித்ஷாவும் ஏன் செல்லவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.

அக்னி வீரர் திட்டத்தில் சேருபவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் இழப்பீடு தரப்படுவதில்லை என சொன்ன ராகுல், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என கேட்டார் ராகுல்.

மேலும், மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட தெரிவிப்பதிலை. பாஜக தலைவர்களை கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். இவ்வளவு பேசும் மோடி காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். சினிமா மூலம்தான் காந்தி மக்களிடம் அறியப்பட்டார் என அவர் சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

google news
Continue Reading

latest news

மாணவர்களுக்கான கல்வி விசா!.. கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலிய அரசு

Published

on

visa

இந்தியாவில் படிக்க விரும்பாத அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்கா, லண்டன், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார்கள்.

அதில் பலரும் வெளிநாடுகளியே கூட வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி இருக்கிறார்கள். பெரும்பாலும், ரஷ்யாவில் மருத்து படிப்பை படிப்பவர்கள் மிகவும் அதிகம். அதேபோல், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் செல்கிறார்கள். இந்நிலையில், மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசி இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இப்போது பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் கல்வி விசா எடுக்க வேண்டுமெனில் இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் தேவைப்பட்டது. இப்போது ஆண்டனி அல்பனேசி அரசு 89 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

இதன் மூலம் அதிக அளவிலான வெளிநாடு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதை தடுக்கமுடியும் என ஆஸ்திரேலிய அரசு நினைக்கிறது. மேலும், பார்வையாளர் மற்றும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விஷா கேட்டு விண்னப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ள விசா கட்டணம் அமெரிக்கா, கனடா நாட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Trending