Categories: tech news

ஐபோன் ப்ளிப் உருவாக்கும் ஆப்பிள் – லீக் ஆன தகவல்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபோன் ஃபோல்டபில் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என்றும், புத்தகம் போன்று மடிக்கக்கூடிய ஐபேட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கடைசியாக வெளியான தகவல்களில் கூறப்பட்டது. இந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ப்ளிப் ஸ்டைலில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சாதனம் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த மாடல் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இது கிளாம்ஷெல் ரக டிசைன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஐபோனில் பயன்படுத்தும் டிஸ்ப்ளேக்களை சாம்சங் டிஸ்ப்ளேவிடம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆப்பிள் மற்றும் சாம்சங் டிஸ்ப்ளே இடையே கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புத்தகம் போன்று அளவில் பெரிய மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியை ஆப்பிள் கைவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Web Desk

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

7 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

28 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago