ஜியோ நிறுவனம் தன்னுடைய 19 பிளான்களின் மொபைல் கட்டணத்தினை 25 சதவீதம் அதிரடியாக உயர்த்தி அறிவித்து இருக்கிறது. இது வரும் ஜூலை3 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட 19 பிளான்களில் 17 பிளான்கள் பீரிபெய்ட் என்றும் 2 பிளான்கள் போஸ்பெயிட் கட்டணம் என்றும் கூறப்படுகிறது. தினசரி ஒரு ஜிபி வழங்கும் ரூபாய் 209ஆக இருந்த பிளான் தற்போது ரூ249க்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 155ரூபாய்க்கு இருந்த பிளான் 189 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
239 ரூபாயாக இருந்த 1.5 ஜிபி நெட் கட்டணம் 299 ரூபாயிற்கு மாற்றப்பட்டுள்ளது. 299 ரூபாயிற்கு இருந்த 2 ஜிபி நெட் கட்டணம் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 399 ரூபாயிற்கு தினசரி 3 ஜிபி தரும் பிளான் விலை 449 ரூபாயிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் மேலும் பல பிளான்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் பிளான்களின் விலையை உயர்த்தியது.
சுமார் இரண்டரை வருடங்கள் கழித்து தற்போது ஜியோ 25 சதவீதம் வரை கட்டணத்தினை உயர்த்தி இருக்கிறது. 5ஜி கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்திருப்பதால் அதை ஈடு செய்யும் விதமாக இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆளாக ஜியோ பிளான்களின் விலையை உயர்த்தி இருக்கும் நிலையில் வோடவோன், ஏர்டெல் நிறுவனங்கள் விரைவில் கட்டணத்தினை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…