ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளின் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே வழங்கிவந்த பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை அந்நிறுவனம் சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்டுள்ள பிரீபெயிட் ரீசார்ஜ்களின் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவை நீக்கப்பட்டது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரீசார்ஜ்கள் நீக்கப்பட்டு விட்டதால் பயனர்கள் இனி அவற்றை பயன்படுத்த முடியாது. இவற்றில் சில ரீசார்ஜ்களில் ஓடிடி பலன்களும், சிலவற்றில் டேட்டா வவுச்சர்களும் வழங்கப்பட்டு இருந்தது. ஜியோ நீக்கிய பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஜியோ ரூ. 3662 விலை ரீசார்ஜ்- இது தினமும் 2.5GB டேட்டா, சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவைகளை 365 நாட்களுக்கு வழங்கின. தினமும் 2GB டேட்டா, சோனிலிவ் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்கி வந்த ரூ. 3226 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, ஜீ5 சந்தா உள்ளிட்டவைகளை 365 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 3225 ரீசார்ஜ்கள் நீக்கப்பட்டு விட்டன.
இதே போன்று தினமும் 2.5GB டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 2999 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, சோனிலிவ் மற்றும் ஜீ5 ஓடிடி சந்தா 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 909 ரீசார்ஜ், தினமும் 2GB டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 806 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, ஜீ5 சந்தாவை 84 நாட்களுக்கு வழங்கிவந்த ரூ. 805 ரீசார்ஜ் நீக்கப்பட்டுள்ளது.
ஜியோ ரூ. 3178 ரீசீார்ஜ் நீக்கப்பட்டு இருக்கிறது. இதில் தினமும் 2GB டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்கியது. இந்த வரிசையில் தினமும் 2GB டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, ஜியோடிவி பிரீமியம் சந்தா மற்றும் 78GB டேட்டா வழங்கி வந்த ரூ. 4498 ரீசார்ஜ் மற்றும் தினமும் 2GB டேட்டா, பிரைம் வீடியோ சந்தா வழங்கிவந்த ரூ. 3227 ரீசார்ஜ் நீக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…