லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லாவா யுவா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்போன் லாவா யுவா ஸ்டார் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் அழகிய டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் கிளாஸி பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.75 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே, 13MP டூயல் AI கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான கேமரா மோட்கள் உள்ளன. இவை ஓரளவுக்கு சிறப்பான புகைப்படங்களை எடுக்க வழி செய்கின்றன. இதில் AI, HDR மற்றும் Panorama போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் யுனிசாக் 9863A பிராசஸர், 4GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம், 64GB மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் 5000mAh பேட்டரி மற்றும் 10W டைப் சி சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. புதிய லாவா யுவா ஸ்டார் மாடல் ஆண்ட்ராய்டு 14 கோ ஓஎஸ் கொண்டிருக்கிறது. இதில் புளோட்வேர் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் எதுவும் இடம்பெறவில்லை.
இத்துடன் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் சென்சார்கள் உள்ளன. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, டூயல் பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் லாவா யுவா ஸ்டார் ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் லாவண்டர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இம்மாத இறுதியில் துவங்கும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…