latest news
அவங்க இடத்துல அவங்களையே… ஸ்டார்பக்சில் சம்பவம் செய்த இளைஞர்… என்ன தெரியுமா?
தொழில்நுட்பத்தை கையாளுவதில் ஒருசிலர் வேற லெவலில் யோசிப்பதை நம்மில் பலரும் பல சமயங்களில் கேள்விப்பட்டிருப்போம். சிலர் இதே விஷயத்தை சொல்லியும் கேட்டிருப்போம். அப்படியான சம்பவம் ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் ஸ்டார்பக்ஸ் விற்பனை மையத்தினுள் நடந்துள்ளது. அப்படி ஸ்டார்பக்சில் என்ன நடந்திருக்கும்?
உலகம் முழுக்க ஸ்டோர்களை நடத்தி வரும் விலை உயர்ந்த குளம்பி (காஃபி) வகைகளை விற்பனை செய்து வருகிறது ஸ்டார்பக்ஸ். இந்தியாவிலும் ஸ்டார்பக்ஸ் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. அந்த வகையில், நபர் ஒருவர் ஸ்டார்பக்ஸ் சென்று இருக்கிறார். ஸ்டார்பக்சில் ஆர்டர் கொடுக்க வேண்டிய கவுன்டருக்கு சென்று தனக்கான குளம்பியை ஆர்டர் கொடுக்காமல், ஜொமேட்டோ செயலி மூலம் ஆர்டர் செய்ய முடிவு செய்தார்.
இவ்வாறு செய்ததன் மூலம் இந்த நபர் ஆர்டர் கவுன்ட்டருக்கு செல்லாமல், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பணத்தை மிச்சம் செய்துள்ளார். ஸ்டார்பக்சில் குளம்பி ஒன்றின் விலை ரூ. 300 முதல் ரூ. 400 வரை துவங்குகிறது. ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளில் ஸ்டார்பக்ஸ் பொருட்களை தள்ளுபடி கூப்பன்களை பயன்படுத்தி குறைந்த விலையிலும் வாங்கிட முடியும். கோல்டு சந்தாதாரர் எனில் இலவச டெலிவரியும் பெற்றுக் கொள்ள முடியும்.
டுவிட்டர் பயனரான சந்தீப் மால் தனது ஸ்டார்பக்ஸ் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இவரது செயல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஸ்டார்பக்ஸ் ஸ்டோருக்கு சென்ற சந்தீப் மால் ரூ. 400 மதிப்புள்ள குளம்பியை ஜொமேட்டோ மூலம் வாங்கியிருக்கிறார். இதற்கு தள்ளுபடி கூப்பன்களை பயன்படுத்திய சந்தீப் தான் ஆர்டர் செய்த குளம்பிக்கு ரூ. 190 மட்டுமே செலுத்தியுள்ளார். இவரது ஆர்டரை ஜொமேட்டோ ஊழியர் ஸ்டார்பக்ஸ் கவுன்ட்டரில் பெற்றுக் கொண்டு அதனை கடையினுள் இருந்த இவரிடமே வினியோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் நெட்டிசன்கள் பலருக்கும் ‘அடடே’ சொல்ல வைத்த நிலையில், சந்தீப் மாலை டுவிட்டரில் பின்பற்றும் நபர் அவரிடம் இவ்வாறு செய்ததற்கு ஜொமேட்டோ ஊழியரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த சந்தீப் மால், ஸ்டார்பக்ஸ் வரும் பலரும் இதுபோன்று செய்து கொண்டு இருப்பதால் எனக்கு இது புதிதல்ல என்று ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் தன்னிடம் தெரிவித்ததாக சந்தீப் மால் பதில் அளித்து இருக்கிறார்.
latest news
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்த இன்டர்ன்ஷிப்கள் தலைசிறந்த பணியிட அனுபவத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை முடித்த பிறகு உடனடி வேலையில் சேர்வவதை எளிமையாக்குகிறது. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்க கீழ்வரும் தகுதி இருப்பது அவசியம் ஆகும்..,
- வயது வரம்பு: 21 முதல் 24 வயது வரை
- முழுநேர வேலையில் ஈடுபடக் கூடாது
- அரசு ஊழியர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தகுதியற்றவர்கள்
- ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பட்டதாரிகள் அல்லது CA அல்லது CMA போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்) மற்றும் கௌஷல் கேந்திரா (திறன் மையங்கள்) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத உதவித்தொகையாக ரூ. 4,500-ஐ அரசிடமிருந்து பெற முடியும். இதோடு நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ. 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகை பெறுவது மட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மட்டும் ரூ. 6,000 நிதி உதவியைப் பெறலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சியாளர்கள் காப்பீடு செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும். இதோடு, பிரீமியம் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
பதிவு செய்வது எப்படி?
- அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.pminternship) பதிவு செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தில் இணையும் முதற்கட்ட இன்டர்ன்கள் தங்களின் ஓராண்டு கால வேலைவாய்ப்பு பயிற்சியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்குவர்.
latest news
ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Cricket
WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரை போட்டி அம்பயர் மற்றும் மூன்றாம் நடுவருடன் வாக்குவாதம் செய்ய வைத்தது.
போட்டியில் நியூசிலாந்து அணி பேட் செய்த போது, சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார். அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார்.
தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார். விக்கெட் என உணர்ந்து வெளியேறிய வீராங்கனையை, அம்பயர் டெட் பால் விதியை கூறி மீண்டும் களத்திற்குள் அழைத்த சம்பவம் தான் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் தலைமை பயிற்சியாளரை வாக்குவாதம் செய்ய வைத்தது.
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. விதிகளின்படியே அம்பயர் முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஐ.சி.சி. விதி 20-இன் கீழ் வரும் கிளாஸ் 20.1-இல் “பந்துவீச்சு அம்பயரை பொருத்தவரை ஃபீல்டிங் பக்கமும், விக்கெட்டில் உள்ள இரு பேட்டர்களும் விளையாட்டை நிறுத்துவதை தெளிவாக தெரிந்தால், பந்து ‘டெட் பால்’-ஆக கருதப்படும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனாலும், இந்த விவகாரத்தில் இரு அணி வீராங்கனைகளும் விளையாட்டை நிறுத்த முற்படவில்லை. மாறாக நியூசிலாந்து வீராங்கனை இரண்டாவது ரன் ஓட முற்படுகிறார், அப்போது இந்திய வீராங்கனை ஸ்டம்பிங் செய்துள்ளார்.
ஐ.சி.சி. விதி 20.6-இன் கீழ் “ஒருமுறை டெட் பால் என்று அறிவிக்கப்பட்டால், அந்த முடிவை மாற்றவோ, மீண்டும் அந்த பந்தை வீசச் செய்யவோ முடியாது,” என கூறுகிறது. ஐசிசி விதியின் கீழ் டெட் பால் என அறிவிக்கப்பட்ட முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்ற விதியை அம்பயர்கள் பின்பற்றியிருப்பார்கள் என்றே தெரிகிறது.
Cricket
WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்யது. இதனால் முதலில் பேட்டிங் ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 17 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. விக்கெட் இழப்பின்றி 119 ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியின் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா அணி பேட் செய்த போது ஏற்பட்ட சம்பவத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை வந்த வேகத்தில் களத்தை விட்டு வெளியேறும் சூழல் உருவானது.
வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டாவது ஓவரில் பேட் செய்த வொல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார். குறிப்பிட்ட பந்தை வொல்வார்ட் நேரில் ஓங்கி அடிக்க, அதனை பிடிக்க ஜேம்ஸ் முற்பட்டார். எனினும், பந்து ஜேம்ஸ்-இன் கையில் பட்டு நேரடியாக அவரது தாடையில் வேகமாக உரசியது.
இதில் நிலை தடுமாறிய ஜேம்ஸ் சட்டென தனது முகத்தை திருப்பிக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனே களத்திற்குள் வந்த பிசியோ ஜேம்ஸ்-க்கு முதலுதவி வழங்கினார். சிறிது நேரம் சிகிச்சை வழங்கிய நிலையில், பிசியோ ஜேம்ஸ்-ஐ களத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டார். அந்தப் போட்டியில் தனது முதல் ஓவரை வீசத் தொடங்கிய ஜேம்ஸ் அதனை முடிக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறினார். நேற்றைய போட்டி முடியும் வரையில் ஜேம்ஸ் மீண்டும் களத்திற்குள் வரவேயில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வெற்றி இலக்கை, 13 பந்துகள் மீதம் இருந்த நிலையில் எட்டியது. இதன் மூலம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
Cricket
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி குவாலியரில் வருகிற 6 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டி நடத்துவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. வங்கதேசம் நாட்டில் இந்துக்களுக்கு எதிரான அத்துமீறலை கண்டித்து வலது சாரி அமைப்புகள் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்கள் தங்கியுள்ள தங்கும் விடுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
மேலும் போட்டி நாளன்று பாதுகாப்பு அதிகாரிகள் மதியம் 2 மணி முதல் பாதுகாப்பு பணிகளை துவங்கவுள்ளனர். இவர்கள் அன்றிரவு ரசிகர்கள் வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பு பணியை தொடர இருக்கின்றனர். முன்னதாக போட்டி நடைபெறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை போராட்டங்கள் மற்றும் மோதலை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருந்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மாதவ்ராவ் ஸ்கிந்தியா சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அன்றிரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது.
முன்னதாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை, இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியிருந்தது. இதே நிலையை டி20 தொடரிலும் தொடர இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதேபோன்று டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் அணி டி20 தொடரிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பி்ல் களமறங்குகிறது.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news20 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news22 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
-
latest news21 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…