Connect with us

tech news

ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published

on

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.9 இன்ச் FHD+ உள்புறம் மடிக்கக்கூடிய LTPO pOLED ஸ்கிரீன், 1-165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் வெளிப்புறம் 4 இன்ச் FHD+ pOLED ஸ்கிரீன், 1-165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உள்ளது. இது முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்த 3.6 இன்ச் டிஸ்ப்ளேவை விட பெரியது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் IPX8 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது.

புதிய மோட்டோ ப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP 2x டெலிபோட்டோ கேமரா, 32MP செல்பி கேமரா போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் 4000mAh பேட்டரி, 45W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்ப்ரிங் கிரீன், பீச் ஃபஸ் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

மோட்டோ ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 99,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 94,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் வலைதளம், ரிலையன்ஸ் டிஜிட்டல், மோட்டோரோலா வலைதளங்களில் ஜூலை 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

google news

latest news

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

Published

on

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..

Published

on

நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். முந்தைய நடைமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவது, அதனை புதுப்பித்தல், மாற்றங்களை செய்வது என எல்லாவற்றுக்கும் உரிய போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்து வந்தது.

தற்போது இது தொடர்பான சேவைகள் ஆன்லைனிலையை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி சீராக செயல்பட்டு வருகிறது.

இது சார்ந்த சேவைகளை முறைப்படுத்த மத்திய அரசு சார்பிலும் பிரத்யேக வலைதளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் பயனரின் வீட்டு முகவரியை மாற்றுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

  • முதலில் பரிவாகன் வலைதளம் செல்ல வேண்டும்.
  • வலைதளத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இனி மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இனி வீட்டு முகவரியை மாற்ற வேண்டும் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு, அதனை உறுதிப்படுத்தக் கோரும் ‘Confirm’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியில் ஆதார் எண் மற்றும் அதற்கான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
google news
Continue Reading

latest news

உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை

Published

on

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில் உள்ளது. இந்தத் தொகையை பணியை வழங்கும் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஊழியரின் சம்பளம், அதில் எத்தனை சதவீதம் டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வருமான சான்றில் இடம்பெற்று இருக்கும். என்னும், நிறுவனங்கள் சார்பில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை முறையாக வருமான வரித்துறையில் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரித்துறையில் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஒரு பணியாளராக இருப்பவர்கள் எனில், 26AS-இல் வரி விலக்கை நீங்கள் சரிபார்க்க முடியும். இது மாதாந்திர வரி விலக்கைக் காட்டுகிறது. உங்களது பே ஸ்லிப்-இல் முதலாளி காட்டும் வரியை டெபாசிட் செய்கிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும். வருடத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.

  • ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் செல்ல வேண்டும்
  • யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்
  • லாக்-இன் செய்ததும், நீங்கள் நீல நிற ரிப்பனுக்குச் சென்று, இ-ஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்கிரால் டவுன் மெனுவை இயக்கலாம்.
  • ‘வருமான வரி ரிட்டர்ன்ஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்கிரால் டவுன் மெனுவில், ‘வியூ 26AS’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இனி தனி இணையப்பக்கம் திறக்கும்.
  • அடுத்து, ​​நீங்கள் ‘வரிக் கிரெடிட்டை பார்க்க (படிவம் 26AS/வருடாந்த வரி அறிக்கை)’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
google news
Continue Reading

latest news

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

Published

on

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டப் பலன்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது.

இந்த நிலையில், ரேஷன் அட்டை வைத்திருப்போர் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்றுவகை ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் ரேஷன் அட்டை வைத்திருப்போர் அரிசி மற்றும் இதர பொருட்களை அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

அநந்யோதயா அன்ன யோஜனா கார்டு மற்றும் காக்கி நிற கார்டு காவல் துறையினருக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 கிலோ வரை சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுகிறது.

தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளும் வழிமுறை நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தமிழக அரசின் tnpds.gov.in என்ற வலைதளம் சென்று மொபைல் நம்பரை ரேஷன் அட்டையுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர 1967 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மற்றும் மொபைல் வழியே மொபைல் நம்பரை இணைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டு உதவி மையங்களில் நேரடியாக மொபைல் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம் ஆகும்.

google news
Continue Reading

latest news

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

Published

on

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப். தொகையை முன்கூட்டியே தனிப்பட்ட காரணங்களுக்காக எடுப்பவர்கள் இனி ரூ. 1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்து இருக்கிறது.

முன்னதாக ஊழியர்கள் தங்களது EPFO கணக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளும் தொகை ரூ. 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதுகுறித்து பேசும் போது, “EPFO பங்களிப்பாளராக இருப்பவர்கள், தங்களது குடும்பத்தில் ஏற்படும் அவசரநிலையை கருத்தில் கொண்டு முன்பை விட அதிக தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஒருமுறை எடுத்துக் கொள்ளும் பி.எஃப். தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

ஊழியர்கள் பி.எஃப். திட்டத்தில் பங்களிப்பாளராக இருக்கும் போது, ஒருமுறை பி.எஃப். திரும்பப் பெறப்படும். எனினும், சில வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுவதற்கான விதிகளில், தனிநபர் தனிப்பட்ட அவசர தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கின்றன.

மேலும், புதிய பணியில் இணைந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டத்தை எளிமையாக்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இது குறித்தும் பேசிய அவர், “முன்பு, நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பி.எஃப். பங்களிப்பாளர்கள் வேலையில் இணைந்த முதல் ஆறு மாதங்களில் கூட பி.எஃப். பணத்தை திரும்பப் பெற முடியும். அது அவர்களின் பணம்,” என்று கூறினார்.

google news
Continue Reading

Trending