மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.9 இன்ச் FHD+ உள்புறம் மடிக்கக்கூடிய LTPO pOLED ஸ்கிரீன், 1-165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் வெளிப்புறம் 4 இன்ச் FHD+ pOLED ஸ்கிரீன், 1-165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உள்ளது. இது முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்த 3.6 இன்ச் டிஸ்ப்ளேவை விட பெரியது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் IPX8 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது.
புதிய மோட்டோ ப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP 2x டெலிபோட்டோ கேமரா, 32MP செல்பி கேமரா போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் 4000mAh பேட்டரி, 45W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்ப்ரிங் கிரீன், பீச் ஃபஸ் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
மோட்டோ ரேசர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12GB ரேம், 512GB மெமரி மாடல் விலை ரூ. 99,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 94,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு அமேசான் வலைதளம், ரிலையன்ஸ் டிஜிட்டல், மோட்டோரோலா வலைதளங்களில் ஜூலை 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…
பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர்…