latest news
விரைவில் வெளியாகும் நத்திங் போன் (2) பற்றி இதெல்லாம் தெரியுமா?
![Nothing-Phone 2 - Cinereporters Info Nothing-Phone 2](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Nothing-Phone-1.jpg)
ஒன்பிளஸ் நிறுவனர் கார்ல் பெய் உருவாக்கிய நத்திங் நிறுவனம் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் என மெல்ல தொழில்நுட்ப சந்தையில் கால்தடம் பதிக்க துவங்கி இருக்கிறது. நத்திங் அறிமுகம் செய்த முதல் தலைமுறை இயர்பட்ஸ் மற்றும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. அதன்படி நத்திங் போன் 2 மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி தகவல்களை அவ்வப்போது நிறுவனம் சார்பில் கார்ல் பெய் தெரிவித்து வருகிறார். இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரில் துவங்கி, அதன் ஒ.எஸ். அம்சங்கள் வரையிலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Nothing-Phone 2
இதுதவிர நத்திங் போன் (2) பற்றிய தகவல்கள் இணையத்திலும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) அதன் முந்தைய வெர்ஷனை விட ஹார்டுவேர் ரீதியிலான அப்டேட் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கவனிக்க கடினமாக்க செய்யும் அப்டேட்கள் செய்யப்படுகின்றன.
இத்துடன் நத்திங் போன் (2) மென்பொருளும் மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது. புதிய நத்திங் போன் (2) அறிமுகமாக மேலும் சில காலம் உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் மூன்று மிகமுக்கிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹார்டுவேர் :
நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என நத்திங் நிறுவனர் கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து விட்டார். இது முந்தைய நத்திங் போன் (1) மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸரை விட பெருமளவு மேம்பட்ட பிராசஸர் ஆகும். நத்திங் போன் (1) மாடல் மல்டி டாஸ்கிங் மற்றும் மேலும் சில பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சீராக இயங்கியது.
இதுதவிர நத்திங் போன் (2) மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நத்திங் போன் (2) மாடல் பல்வேறு பயன்பாடுகளிலும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
Nothing-Phone 2
மென்பொருள் :
ஹார்டுவேரை தொடர்ந்து நத்திங் போன் (2) மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதில் உள்ள சாஃப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) மாடலில் நத்திங் ஒ.எஸ். 2.0 வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஒ.எஸ். ஸ்மார்ட்போனில் ஏராளமான புதிய அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
“2023 மென்பொருளுக்கான ஆண்டு. நத்திங் நிறுவனத்தின் உண்மையான தோற்றம் மற்றும் தனித்துவம் மிக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் நத்திங் ஒ.எஸ். 2.0 இருக்கும்,” என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வழக்கத்தை போன்றே நத்திங் போன் (2) மாடலுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களும் வழங்கப்பட இருக்கிறது. நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்க முயற்சித்து வருகிறது.
டிசைன் :
நத்திங் போன் (1) மாடல் அதன் டிசைன் அடிப்படையில் உலக சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதே நிலையை புதிய நத்திங் போன் (2) மாடலும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) டிசைன் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், டிசைன் அடிப்படையில் புதிய போன் (2) மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் நத்திங் போன் (1) போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.
டிசைன் தவிர நத்திங் போன் (2) மாடலின் க்லிம்ஃப் இன்டர்ஃபேசில் வித்தியாசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) மாடலில் எந்த அளவுக்கு மாற்றங்கள் வழங்கப்படும் என்ற யோசனை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது
india
சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.
latest news
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
india
மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!
ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.
இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
india
திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!
கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .
திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.
இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
tech news2 days ago
வேற லெவல் லுக், சூப்பர் ஸ்பெக்ஸ் கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news21 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news19 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!