Categories: latest newstech news

பி.ஐ.எஸ். கிடைச்சாச்சு.. அடுத்து வெளியீடு தான்.. விரைவில் இந்தியா வரும் நத்திங் ஸ்மார்ட்வாட்ச்..!

நத்திங் நிறுவனம் தனது முதல் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்- நத்திங் போன் 2 அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாத துவக்கத்திலேயே நத்திங் போன் 2 அறிமுகமாக இருக்கும் நிலையில், நத்திங் நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய சாதனம் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது.

டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புதிய நத்திங் சாதனம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ‘CMF by Nothing’ எனும் பெயரில் நத்திங் நிறுவனம் டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்து இருப்பதாக முகுல் ஷர்மா தெரிவித்து இருந்தார். எனினும், இந்த சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் அப்போது வெளியாகவில்லை.

Nothing-Carl-Pei

இந்த நிலையில், தற்போது பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கும் நத்திங் நிறுவன சாதனம் D395 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நத்திங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நத்திங் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீடு மட்டும் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால், இது நத்திங் போன் 2 மாடலுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான். நத்திங் வாட்ச் பற்றி இதுவரை எந்த தகவல்களோ அல்லது டீசர்களோ வெளியாகாததே இதற்கு காரணம் எனலாம்.

முன்னதாக நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பற்றி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ‘ஸ்மார்ட்வாட்ச்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன் கடந்த ஞாயிறு கிழமை புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை வாங்கினேன். ஆனால், எனக்கு அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. தேவையாற்ற பொருளாக எனக்கு உணர்கிறது. நீங்கள் எதற்காக ஸ்மார்ட்வாட்ச்களை பயன்படுத்துகின்றீர்கள்?’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Nothing-Carl-Pei-tweet

இந்த நிலையில் தான், நத்திங் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்பு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் தேவையற்ற ஒன்றாக கூறிய நிலையில், தற்போது பிரான்டு மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி தங்களின் மனதை மாற்றிக் கொண்டு இருக்கலாம் அல்லது நத்திங் நிறுவன ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை விட பனுள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

நத்திங் நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி இருக்கலாம், என்றும் போட்டி நிறுவன மாடல் எத்தகைய அம்சங்களை கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே கார்ல் பெய் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவாயினும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்குவது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

admin

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago