ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல் நார்ட் 4 கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான நார்ட் 4 ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 23 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
விலை குறைப்பு விவரங்கள்:
இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் 8GB+128GB, 8GB+256GB, மற்றும் 12GB+256GB மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 29,999, ரூ. 32,999 மற்றும் ரூ. 35,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது விலை குறைப்பின் படி நார்ட் 4 பேஸ் வேரியண்ட்டை ஐசிஐசிஐ மற்றும் ஒன்கார்டு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் குறைந்து விலை ரூ. 27,999 என்று மாறுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8GB+256GB மற்றும் 12GB+256GB மெமரி மாடல்களை இதே கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ. 3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதனால் இவற்றின் விலை முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 32,999 என மாறுகிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் குறைந்த விலையில் வாங்கிடலாம்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…