ஓய்வூதியம் பெறுபவர்கள் தொடர்ந்து அதனை வாங்க அரசிடம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழந்தவர்கள் பெயரில் பயன் பெறுவது மற்றும் இதர முறைகேடுகளை தடுக்க முடியும். இதன் பொருட்டு ஓய்வூதியம் பெறுவோர், ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.
வயதில் மூத்தவர்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு சிரமம் கொள்ளக்கூடாது, அவர்களுக்கு எளிதில் ஆயுள் சான்று கிடைப்பதை வழிவகை செய்யும் நோக்கில், மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஆகியவை அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளன. இது தொடர்பான அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.
முன்னதாக 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர்கள் நலச் சங்கங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம்களை ஓய்வூதியர் நலத்துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்ரின் மூலம் 1.45 கோடி ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
இதே வரிசையில், இந்த ஆண்டும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 1 ஆம் தேதி துவங்கி நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இதனை ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்த முகாம்கள் நாடு முழுக்க முக்கிய நகரங்கள், மாவட்ட தலைமையகங்களில் நடைபெற இருக்கிறது. இதோடு ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், ஓய்வூதியர் நல சங்கங்கள், தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஜீவன் பிரமான் ஆகியவை 157 நகரங்களில் இந்த முகாமை நடத்த உள்ளன.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…