போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது டீசர் வெளியிட்டு இந்த தகவலை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய டேப்லெட் மாடலின் டிசைன் மற்றும் டிஸ்ப்ளே விவரங்களையும் போக்கோ நிறுவனம் போனஸாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் போக்கோ பேட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் தற்போது இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்திய வெர்ஷனிலும், சர்வதேச மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது.
2024 மே மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ பேட் மாடல் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், 10,000mAh பேட்டரி கொண்டிருந்தது. மேலும், இது வைபை வசதி மட்டும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது போக்கோ இந்தியா வெளியிட்டுள்ள டீசர்களின் படி போக்கோ பேட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுடன் கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் அறிமுகமாகிறது. இத்துடன் புதிய டேப்லெட் கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள மைக்ரோசைட் விவரங்களின் படி போக்கோ பேட் மாடலில் 12.1 இன்ச் டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், Tuv ரெயின்லாந்து சான்று கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய டேப்லெட் பற்றி வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் போக்கோ பேட் மாடல் பின்புறம் மற்றும் முன்புறத்தில் 8MP கேமரா சென்சார் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள், 10,000mAh பேட்டரி, 33W சார்ஜிங் வழங்கப்படுகிறது. இத்துடன் வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…