ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜியோடேக் ஏர் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜியேடேக் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய ஜியோடேக் சாதனம் ஜியோதிங்ஸ் செயலியுடன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. புதிய ஜியோடேக் ஏர் மாடல் ஆப்பிள் ஃபைன்ட் மை அம்சத்திலும் இயங்கும்.
ஜியோடேக் ஏர் மாடல் மெல்லியதாக இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் சாவிகள், ஐடி கார்டுகள், வாலெட், கைப்பை, செல்லப்பிரானி என்று தவறவிடக்கூடாது என நினைக்கும் அனைத்தையும் பாதுகாக்க முடியும். இந்த சாதனம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஐஓஎஸ்-இல் வெர்ஷன் 14 மற்றும் அதன் பிறகு வெளியானவை, ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதன்பிறகு வெளியானவையுடன் ஜியோடேக் ஏர் பயன்படுத்தலாம். இதில் ப்ளூடூத் 5.3 வசதி உள்ளது. இதை கொண்டு சாதனங்களுடன் எளிதில் கனெக்ட் செய்து வயர்லெஸ் டிவைஸ் டிராக்கிங் மேற்கொள்ளலாம். இதில் பில்ட்-இன் ஸ்பீக்கர் உள்ளது. இதை கொண்டு அதிகபட்சம் 90 முதல் 120db வரை ஒலியெழுப்பி தொலைந்து போனவற்றை கண்டுபிடிக்க முடியும்.
இந்திய சந்தையில் ஜியோடேக் ஏர் மாடலின் விலை ரூ. 2,999 என அந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதனை ரூ. 1499 விலையிலேயே வாங்கிட முடியும். இந்த சாதனம் புளூ, ரெட் மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஜியோடேக் ஏர் சாதனத்தை ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் வலைதளங்களிலும் வாங்கிட முடியும்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறாது சாம்சங் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம். இங்கு சாம்சங் நிறுவன தயாரிப்புகள் உற்பத்தி…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய…
இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது…
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…