Categories: latest newstech news

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை, நிலம் எங்கு அமைந்துள்ளது உள்பட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

தமிழகத்தில் வருவாய் துறை சார்ந்த ஆவணங்களை பெற அதிக கால தாமதம் ஏற்டுவது, வருவாய் துறைக்கு மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளும் தாமதமாகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், வருவாய் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறும் போது, “தமிழ்நாடு அரசின் வருவாய் துறை இயக்குநரின் உத்தரவுப்படி வருவாய்த் துறை சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். இதனை நிறைவேற்ற கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.”

“உத்தரவின் படி ஆன்லைனில் விண்ணப்பம் அப்லோடு செய்த நாளில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் அது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, மக்களுக்கு ஆவணங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு உரிய காரணம் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை இணைக்க வலியுறுத்த வேண்டும். இதன் காரணமாக வருவாய் துறை சார்ந்த பட்டா மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை 15 நாட்களுக்குள் செய்து முடிக்கலாம்,” என்று தெரிவித்தார்.

புதிய உத்தரவு காரணமாக வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் 26 வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேணஅடும். இதனால், மக்களுக்கு வருவாய் துறை சார்ந்த ஆவணங்கள் எளிதில் கிடைப்பதோடு, உடனடி தீர்வும் கிடைக்கும்.

Web Desk

Recent Posts

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

1 hour ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

2 hours ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

2 hours ago

குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…

சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான்…

2 hours ago

சூப்பர் மேனாக ரோகித்.. சூப்பர் கேட்ச் பிடித்து அசத்தல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது…

2 hours ago

ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2025 குறித்த ஆலோசனை கூட்டம்…

3 hours ago