Connect with us

latest news

கொஞ்சம் முதலீடு, அதிக லாபம்.. எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..

Published

on

உலகளவில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், சமீப காலங்களில் நுகர்வோரும் அதிகளவு நிதி மேலாண்மை மற்றும் நிதித்துறை சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பொது மக்களில் பலர், தங்களது சொத்துக்களை சேகரிக்கும் விதம், அதில் இருந்து கிடைக்கும் லாபம் உள்ளிட்டவைகளில் சிறந்த திட்டங்களில் தேர்வு செய்ய தனி கவனம் செலுத்துகின்றனர்.

இந்த மாற்றம் காரணமாக பலத்தரப்பட்ட முதலீடு திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபம் பற்றியும் அறிந்து கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் பயனர்கள் ஏராளமான முதலீட்டு விருப்பங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்வதோடு தங்களது பொருளாதாரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வரிசையில், எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய மற்றும் புதுமையான நிதி சார்ந்த சேவைகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவற்றில் பலவகை ரிக்கரிங் டெபாசிட் மற்றும் SIP எனப்படும் சிஸ்டமடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான்களை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் சி.எஸ். ஷெட்டி சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

“இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது முதலீடுகள் அனைத்தையும் அதிக ரிஸ்க் நிறைந்த முதலீட்டு திட்டங்ளில் முதலீடு செய்ய அதிகம் விரும்புவதில்லை. வங்கி சார்ந்த சேவைகள் எப்போதும் தொடர்ந்து வழங்கப்படும். இதனால், நாங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான புதிய சேவைகளை கொணடுவர முயற்சித்து வருகிறோம்.”

“எங்களிடம் அதற்கான திறன் கட்டாயம் உள்ளது. நாங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி நிகர லாபம் என்ற மைல்கல்லை அடையும் முதல் இந்திய நிறுவனமாக வர விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக 2024 நிதியாண்டில் எஸ்.பி.ஐ. வங்கி ரூ. 61,077 கோடி நிகிர லாபம் எட்டியது. இதில் அந்நிறுவனம் 21.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. தனியார் துறையில் கடன் வழங்குவதில் எஸ்.பி.ஐ. முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை ரூ. 4 லட்சம் கோடி கடன் தொகையை வெளியில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news

latest news

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

Published

on

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லியிருந்தது ஏற்கனவே.

இந்த சூழலில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து பெய்து வரும் மழையினால் வெயில் வாட்டி வந்த இடங்களில் இதமான சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் வட-கிழக்கு பருவ மழை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்பொது பெய்து வரும் இந்த மழை பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

RainFall

RainFall

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே ஐம்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

google news
Continue Reading

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

latest news

ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?

Published

on

இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில், இந்தத் திட்டத்தில் பொது மக்களுக்கு பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டன,

மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதோடு, அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறவும் ரேஷன் அட்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரேஷன் அட்டை இல்லாதவர்கள் அரசு திட்டங்களில் பயன்பெற முடியாது. ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் ரேஷன் திட்ட பலன்கள் கிடைக்கும். இதற்காக ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (செப்டம்பர் 30) நிறைவடைந்தது.

ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. அப்டேட் செய்யதாவர்களுக்கு ரேஷன் திட்ட பலன்கள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இவ்வாறு செய்ய தவறியவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனினும், அரசு தரப்பில் பொது மக்கள் ரேஷன் கார்டுடன் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொது மக்கள் கவலையின்றி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் எவ்வித தடையும் இன்றி ரேஷன் திட்ட பலன்களை தொடர்ந்து பெற முடியும்.

google news
Continue Reading

Cricket

கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்

Published

on

மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது என நிச்சயம் திட்டம் தீட்டியிருக்கும். எனினும், அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்திய அணி தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, வங்கதேசம் அணியின் விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர் போர்டை எகிற செய்த சம்பவம் பலருக்கும் நீண்டகாலம் நினைவில் நிற்கும். இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் துவங்கும் முன் இந்திய டிரெசிங் ரூமில் என்ன நடந்தது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.

“கவுதம் கம்பீரின் மனநிலை கூட, போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முடிந்த வரை முன்னணியில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை சாத்தியப்படுத்த ஒரு தலைவர் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில், ரோகித் சர்மா இதனை பலமுறை செய்து காட்டிய நிலையில், மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பந்து பவுன்ஸ் ஆகலாம், மெல்ல கீழேயும் வரலாம் என்ற பிட்ச்-இல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடித்தது.”

“பந்துவீச்சில் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால், கேப்டன் முன்னணியில் இருந்து செயல்படுவது, அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அருமையாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது. ஒவ்வொருத்தரும் தங்களது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர், அதனை களத்திலும் பிரதிபலிக்க செய்கின்றனர். மீண்டுவருவதை பார்க்கும் போது அவர்கள் அங்கு சரியாகவே உள்ளனர்,” என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இரண்டு நாள் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி காட்டிய வேகம் பல சாதனைகளை படைத்ததோடு, வங்கதேசம் வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நான்காவது நாளில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய வைத்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டம் முடிவதற்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீயாக செயல்பட்டார். இதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை களமிறக்கியதோடு, நினைத்தப்படி இந்திய அணி முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தின் நிறைவில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க பல தந்திரங்களை தொடர்ச்சியாக கையாண்டனர்.

அந்த வகையில், ரவிச்சந்திரன் அஷ்வின் சுழலில் சிக்கி வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடல் அணியினருடன் எப்போதும் இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய குறிப்பிட்ட ஓவரை வங்கதேசம் அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹாசன் எதிர்கொண்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் விராட் கோலி, அஷ்வினிடம் ஏதோ கருத்து தெரிவித்தார்.

இதன்பிறகு, அஷ்வின் வீசிய பந்தில் ஜாகிர் ஹாசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இடதுகை ஆட்டக்காரரான ஹாசன் பத்து ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்னணயில் உள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

google news
Continue Reading

Trending