ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் நிலையில், ஸ்மார்ட் கார்டு பெறும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்டு பெற விரும்புவோர் அதற்காக அரசு அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
ஆனால், தற்போது இந்த நிலை மாறி பயனர்கள் ஆன்லைன் மூலமாகவே ஸ்மார்ட் கார்டு பெற விண்ணிப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் இணைய வசதி இருக்கும் எந்த இடத்தில் இருந்து கொண்டும் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் முன் உங்களிடம்- ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, பான் அட்டை, புகைப்படம், வருமான சான்று, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்டவை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் தமிழக அரசின் TNPDS வலைதளம் செல்ல வேண்டும்.
இனி ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் (Smart Card application) என கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
வலைப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில், தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
விவரங்களை பூர்த்தி செய்ததும், தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
இனி குடும்ப உறுப்பினர்கள் விவரம், கியாஸ் இணைப்பு விவரங்களை பதிவிட வேண்டும்.
அடுத்ததாக விண்ணப்பத்தை சமர்பிக்கக் (Submit) கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பின், உங்களது விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதை கூறும் விண்ணப்ப எண் உருவக்கப்படும்.
பயனர்கள் இந்த விண்ணப்ப எண் பயன்படுத்தி தங்களது ஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அதற்கான தகவல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வடிவில் வழங்கப்படும்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…