டாடா பிளே ஃபைபர் நிறுவனம் “Everybody Wins” என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஐபோன் 15 (128GB) மாடல், அமெரிக்கன் டூரிஸ்டர் பேக்-பேக் (Bagpack), ஜோடியுடன் படம் பார்க்க சினிமா டிக்கெட்டுகள் அல்லது ஸ்விக்கி வவுச்சர் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் டாடா குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் பயன்பெற முடியாது. இந்த சலுகை அனைவருக்கும் பரிசளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி குறைந்தபட்சம் 50Mbps வேகத்தில் இணைய சேவையை பெற வேண்டும். புதிய இணைப்பை வாங்கும் போது, பயனர்கள் சக்கரம் ஒன்றை சுற்ற வேண்டும். பிறகு அந்த சக்கரம் எங்கு நிற்கிறது என்பதை பொருத்து பரசு வழங்கப்படும்.
வெற்றிகரமாக ரெஜிஸ்டர் செய்து முடித்ததும். சக்கரத்தை சுழற்ற வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பரிசை பெற்றுக் கொள்வதற்கு பயனர்கள் டாடா பிளே ஃபைபர் செயலியை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு அனுப்பப்பட்ட ஆக்டிவேஷன் கோட்-ஐ 48 மணி நேரத்திற்குள் பதிவிட வேண்டும்.
இதைத் தொடர்ந்து பயனர்களுக்கு பரிசு ஏழு முதல் பத்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். வவுச்சர்கள் பயனர் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் நம்பருக்கு 48 மணி நேரததிற்குள் அனுப்பப்படும்.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…