Connect with us

latest news

செம மாஸ்சாக களமிறங்கும் poco f5 5g மொபைல்.. இது midrange போன்களின் விற்பனையை காலி பண்ணுமா?

Published

on

poco f5 5

 

ரெட்மியின்(redmi)கீழ் சப்பிராண்டுடாக(sub brand)இயங்கும் போக்கோ(poco)தனது புதிய 5g மொபைலை வெளியிட்டுயிருக்கிறது. இதில் போக்கோ எஃப்5(poco f5) மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ(poco f5pro)என இரு மாடல்களையும் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் அடங்கிரும் சிறப்பம்சங்கள் தற்போது விற்பனையில் இருக்கும் போன்களை எல்லாம் ஒரங்கட்டும் அளவிற்க்கு உள்ளது. இது வருகிற 16-5-2023 அன்று விற்பனைக்கு வரவிருக்கிறது.

poco f5 5g 2

*ப்ராஸசர்(processor):

poco f5 5g

இதில் ஸ்னாப்டிராகன்(snapdragon)7gen2, ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன்(snapdragon)8gen1 என்றழைக்க படக்கூடிய அதிநவீன ப்ராஸசர்கள்(processor) பயன்படுத்தப்படுகிறது. 1மில்லியனுக்கு மேல் அன்டூடூ(antuttu) மதிபெண்களை பெற்றுள்ளது. அதனால் பல செயலிகளை ஓரே நேரத்தில் பயன்படுத்தினாலும் போனின் வேகமாக இருக்கும். உபயோகிக்கும் போது வாடிக்கையாளர்க்கு இடையுரு ஏற்படாமல் மென்மையாக செயல்படும்.

*டிஸ்ப்ளே(display):

display

6.67-ல் Full hd+ amoled டிஸ்ப்ளேவை(display) கொண்டுள்ளது. 1000nits (peak britness)உச்ச கட்ட வெளிச்சத்தில் ஒளிரக்கூடியது. இதனால் அதிக வெயில் படக்கூடிய இடத்திலிலும் சுலபமாக பார்க்க முடியும். டால்ஃபின் விஷன் சப்போர்ட்டையும்(Dolphin Vision Support)கொண்டுள்ளது.

* போக்கோ எஃப்5(poco f5)யின் சிறப்பம்சங்கள் :

இதில் இதுவரை எந்த போனில் இல்லாத அளவிற்க்கு மொபைல் கேம் விளையாடுவதற்கு சிறப்பாக ”hyperboost gaming” என்னும் வசதியை அறிமுகம் செய்கிறது. இது போனில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருளை மேம்படுத்தி ரேம் (ram) மூலம் எவ்வித தொய்வும் இன்றி நிலையாக வைக்கிறது. மற்றும் நீடுத்து உழைக்க கூடிய 5ஜி வைஃபை(wifi) ஆன்டனா(antana) உள்ளது.

poco f5

இது கேம் விளையாடும் பொழுது தடையில்லா தொடர்பை வழங்க இது உதவியாக இருக்கும் என்று நிறுவனத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக கேம் விளையாடும் போது போன் வேகமாக வெப்பமாதலை தடுக்க 14 அடுக்கு குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. வலது பக்க கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது .

*கேமிரா(camera):

poco f5 5g

பின்புரம் 64 mp ois வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் 4k30fps வீடியோக்களை எடுக்க முடியும். இதன் புகைபடம் மிகவும் தெளிவாக உள்ளது. முன்பக்க கேமிரா 16mp கொண்டுள்ளது. மேலும் பல புதிய வழி முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 8mp அல்ட்ரா ஒய்டு (ultra wide) மற்றும் 2mp மேக்ரோ (macro) லென்சை கொடுக்கப்பட்டுள்ளது.

* சார்சர் (charger):

poco f5 5g

5000mah பேட்டரி (battery)கொண்டு 67w மூலம் சார்ச் (charge) செய்யப்படுகிறது.

ip53 மதிப்பீடு நீர் மற்றும் தூசுலிருந்து காக்கப்டுகிறது. அருமையான தெறிக்கும் சத்தம் கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இரண்டு வருட ஓ.ஸ்(OS) புதுப்பிப்பு மற்றும் 3 வருட பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதன் விலை 8+256ஜிபி 30000 மற்றும் 12+256ஜிபி-ன் விலை 35000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

Continue Reading

india

மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!

Published

on

ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.

விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது.  இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது.  அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Continue Reading

india

திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!

Published

on

கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .

திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.

இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

Continue Reading

latest news

வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

Published

on

கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரிஜு விஜயன். இவரின் மனைவி பிரியா நாயர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா நாயருக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். மேல் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.

வாரம் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை சிகிச்சைக்காக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் பலரிடமும் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் அவரிடம் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Continue Reading

latest news

146 பழங்குடியின இளைஞர்களுக்கு… பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் மு க ஸ்டாலின்…!

Published

on

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பொறியியல், தொழில்நுட்பக் கல்வி, ஐடிஐ, பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

அதன்படி மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் 450 பேரை திரட்டி பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதன் முடிவில் 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி சென்னை கலைவாணரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 200 பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி அணை வழங்கப்பட்டது.

இந்த 200 பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாதம் காலம் பயிற்சி வழங்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து அதில் திறம்பட பயிற்சி பெற்ற இளைஞர்களில் 146 இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி இருந்தார். 146 இளைஞர்களின் 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Trending

Exit mobile version