Connect with us

latest news

பயனர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா – உடனே பெறுவது எப்படி?

Published

on

vodaphone

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்தின் 5ஜி சேவைகளை வெளியீட்டு பணிகளும் தொட்ரந்து தாமதமாகிறது.

பயனர் எண்ணிக்கை குறைவதை நிறுத்தும் நோக்கில் வி நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் தான், தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் திட்டங்களை, பயனர்கள் வி செயலியின் மூலம் ரிசார்ஜ் செய்யும் போது எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூடுதல் டேட்டா வழங்கியது. தற்போது இதே திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும்.

vodaphone

vodaphone

“மஹா ரிசார்ஜ் திட்டம்” என்று அழைக்கப்படும் இந்த திட்டம் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. மேலும் பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.

வி கூடுதல் டேட்டா வழங்கும் ரிசார்ஜ் திட்டங்கள்:

புதிய திட்டம் குறித்து வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது மூன்று நாட்களுக்கு 2 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும். ரூ. 299 மற்றும் அதிக விலை கொண்ட பிரீபெயிட் திட்டங்களை தேர்வு செய்யும் போது 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும். இத்துடன் வி மூவிஸ், டிவி, வி மியூசிக் மற்றும் வி கேம்ஸ் உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. வி கேம்ஸ் செயலியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஹெச்டிஎம்எல் 5 சார்ந்து உருவாக்கப்பட்ட 1200-க்கும் அதிக மொபைல் கேம்கள் உள்ளன.

முன்னதாக வி நிறுவனம் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு ஆப்ஷன்களை எதிர்பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு திட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. அதன்படி இரு பிரீபெயிட் திட்டங்களிலும் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அன்ற அடிப்படையில் மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

vodaphone

vodaphone

30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரு திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது. இரு திட்டங்களை வித்தியாசப்படுத்துவது வாய்ஸ் காலிங் மற்றும் ஒடிடி பலன்கள் தான் எனலாம். ரூ. 368 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் சன் நெக்ஸ்ட் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 369 திட்டத்தில் சோனிலிவ் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் தவிர வி நிறுவனம் ரூ. 181 விலையில் மற்றொரு பிரீபெயிட் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவை விரைந்து பயன்படுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் டேட்டா பெற்றுக் கொள்ள முடியும். இது ஆட் ஆன் டேட்டா திட்டம் ஆகும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

Published

on

By

தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

Hizb-ut-Tahrir வழக்கு

கடந்த 2021-ல் மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Hizb-ut-Tahrir உடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஃபேஸ்புக்கில் `காழிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு’ என்கிற கணக்கு மூலம் பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த என்.ஐ.ஏ அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஹமீது ஹூசைன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் மற்றும் முகமது மௌரீஸ், காதர் நவாஸ் ஷெரீஃப், அகமது அலி ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டையை அடுத்த மண்டையூரில் விவசாய நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருந்த அகமது கான் மற்றும் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த அகமது என்கிற இரண்டு பேரைக் குறிவைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

google news
Continue Reading

Cricket

கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!

Published

on

By

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் அறிவித்திருக்கிறார்கள்.

விராட் கோலி

தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. 2010-ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் கோலி, இதுவரை 6 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கிறார். 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பைய வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், டி20-யைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு இதுதான் முதல் உலகக்கோப்பை.

ஆட்டநாயகன் விருதுக்குப் பின் பேசிய கோலி, `இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். நாங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைதோமோ… அதை சாதித்திருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். விராட் கோலி, 125 சர்வதேச டி20 போட்டிகளில் 4,188 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தியா சார்பில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா

2007-ல் இந்தியா விளையாடிய முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் அறிமுகமான ரோஹித் ஷர்மா, டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ரன் ஸ்கோரர். முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு மொத்தமாக 9 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்கிற பெருமை கொண்டவர்.

இளம் வீரராக முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு, தற்போது கேப்டனாக இந்த உலகக்கோப்பை வென்றிருக்கிறார். 159 டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் உள்பட 4,231 ரன்கள் அடித்திருக்கிறார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, `இது என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி கூட…’ என்று விராட் கோலியைத் தொடர்ந்து ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடாத ரோஹித்தும் கோலியும் இந்த உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்தே, கடந்த ஜனவரி முதல்தான் டி20-களில் விளையாடத் தொடங்கினர். இந்தத் தொடருக்கு முன் ரோஹித் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்தான் இந்தியாவின் கேப்டன் என்பதில் கோச் டிராவிட் உறுதியாக இருந்தார். அவரின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி கோப்பையை பரிசளித்திருக்கிறார் ரோஹித்.

google news
Continue Reading

Cricket

13 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை… டி20 சாம்பியனான இந்திய அணி!

Published

on

By

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 சாம்பியனாக முடிசூடியது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, பவர்பிளேவில் ரோஹித், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து கைகோர்த்த விராட் கோலி – அக்சர் படேல் ஜோடி இந்திய அணியின் ரன் வேகத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல், 47 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த ஷிவம் துபே விராட் கோலிக்கு கம்பெனி கொடுக்க அவரும் ஆக்‌ஷன் மோடுக்கு மாறினார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி, இந்த ஒரே போட்டியில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுக்க முடியுமா என்று நினைத்திருந்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது.

முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் டிகாக்கும் ஸ்டப்ஸும் எதிர் தாக்குதல் ஆட்டம் ஆடினர். ஸ்டப்ஸ், டிகாக் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹென்ரிச் கிளாஸன் மிரட்டலான ஆட்டம் ஆடினார். கடைசி 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்கிற நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் வீசிய 14-15வது ஓவர்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா 38 ரன்களை எடுத்தது. குறிப்பாக அக்சரின் 15-வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது.

கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் என்ற நிலையில், கிட்டத்தட்ட மேட்ச் இந்தியாவின் கையைவிட்டு போய்விட்டது என்றே நினைத்தனர். ஆனால், 16-வது ஓவரை வீசிய பும்ரா, கடைசி வரைக்கும் சண்ட செய்வோம்னு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தார். 17-வது ஓவரில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி பாண்டியாவும் மறுமுனையில் பிரஷரை ஏற்றினார்.

அடுத்த ஓவரில் மார்கோ யான்சனை வீழ்த்தியதோடு 2 ரன்களை மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் 20 ரன் தேவை. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தனது பங்குக்கு நெருக்கடியை அதிகரித்ததோடு 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவை. 16-19 இடையிலான 4 ஓவர்களில் இந்தியா 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தது மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. பாண்டியா வீசிய முதல் பந்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் அட்டகாசமான கேட்ச் பிடித்து கில்லர் மில்லரை வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2007-க்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது.

google news
Continue Reading

india

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

Published

on

By

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த மச்சிப்பா தண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையறிந்து மகேஷின் குடும்பத்தினரும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரிடம் அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குப் போன மகேஷ் மனைவியை அடிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரின் மனைவி மகேஷை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார். கை, கால்களை பிணைத்து வைத்ததுடன், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்றை எடுத்து வந்து உடலின் பல இடங்களிலும் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷூக்கு அவரின் மனைவியே மருந்தும் போட்டு பராமரித்து வந்திருக்கிறார். இரண்டு நாட்களில் காயம் சிறிது ஆறிய நிலையில் நிஸாமாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மகேஷ், நடந்த விஷயங்களைச் சொல்லி மனைவி மீது புகார் அளித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

Published

on

women

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தகுதியான பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 கொடுக்கப்படும் என திமுக அரசு சொன்னது. சொன்னபடியே தற்போது அந்த திட்டம் நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசை பார்த்து தற்போது அண்டை மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் வைத்து பிரச்சாரங்கள் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசும் பெண்களுக்கு மாதா மாதம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியிருக்கிறது. 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவித்தொகையாக கொடுக்கப்படும் என அந்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில் இதை அறிவித்திருக்கிறார். மேலும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் மின்சார கட்டன்ணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதோடு, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை எனவும் அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

Trending