விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது Y58 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக குறைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பின் படி, இந்த ஸ்மார்ட்போன் ப்ளி்ப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் வலைதளங்களில் புதிய விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆன்லைன் போன்றே ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
விவோ Y58 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை தற்போது ரூ. 18,499 என மாறியுள்ளது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 1000 குறைவு ஆகும். ஆன்லைன் தளங்களில் விலை குறைப்பு தவிர இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ Y58 5ஜி மாடலில் 6.72 இன்ச் 2408×1080 Full HD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், அட்ரினோ 613 GPU, 8GB ரேம், 128GB மெமரி, மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ Y58 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 44W சார்ஜிங் வசதி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…