உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்ற முறையை விரைவுப்படுத்தியதோடு, எளிமையாக்கி இருக்கிறது. அடிப்படை இணைய வசதி இருந்தால் உலக மக்களை சில க்ளிக்குகளில் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.
ஆரம்ப காலத்தில் தகவல் பரிமாற்றத்தை ஒட்டி ஏராளமான வசதிகளை வழங்கிய போதிலும், வாட்ஸ்அப் செயலியில் இன்றளவும் புதுப்புது வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் செயலியில் டிரான்ஸ்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் முதற்கட்டமாக கிடைக்கிறது.
இதை கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட்களை எளிதில் வார்த்தைகளாக மாற்ற முடியும். மேலும், இதற்காக அவர்கள் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை புது அப்டேட் நீக்கியிருக்கிறது. தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், போரத்துகீசு, ரஷியன் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் வாய்ஸ் நோட்களை வார்த்தைகளாக மாற்றும் வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
விரைவில் இந்த அம்சம் பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாட்ஸ்அப் சாட் பகுதியில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை செயலியின் செட்டிங்ஸில் இருந்த படி செயல்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள சாட்ஸ் ஆப்ஷன் சென்று இந்த வசதியை செயல்படுத்திக் கொள்ளலாம்.
ஆக்டிவேட் செய்யப்பட்டதும், வாய்ஸ் நோட்களின் கீழ் டிரான்ஸ்க்ரிப்ஷனுக்கான ஆப்ஷன் இடம்பெறும். பயனர்கள் அதனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட வாய்ஸ் நோட், எழுத்து வடிவில் டவுன்லோட் செய்யப்படும். பயனரின் வாய்ஸ் நோட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதில் வாய்ஸ் நோட் அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோர் மட்டுமே அதை இயக்க முடியும்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…