tech news
மென்பொருள் பொறியாளர்களின் வேலைக்கு ஏ.ஐ. வேட்டு வைக்குமா, பில் கேட்ஸ் சொல்வது என்ன?
![Bill Gates - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Bill-Gates.jpg)
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், ஒருசிலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்ளும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஐ. பற்றிய கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றாலும் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிவித்தார். மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் நோக்கம் ஒரு பணியை விரைந்து செய்து முடிக்க உதவுவதும், பயிற்றுநர்களை போன்று செயல்படுவது தான். இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிகமுக்கிய இடங்களில் இந்த தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்யும் என்பதே இந்த தொழில்நுட்பத்தின் வியக்கவைக்கும் விஷயம். சரியாக கையாளும் போது இந்த தொழில்நுட்பம் மனிதர்களின் பணியை மேலும் வேகமாக செய்துமுடிக்க உதவிகரமாகவே இருக்கும். மென்பொருள் பொறியாளர்கள் விவகாரத்தில், வரும் ஆண்டுகளிலும் மனித பொறியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.
ஒருநாள் ஏ.ஐ. ஆட்டோமேஷன் முறை மாபெரும் வளர்ச்சி கண்டு ஏராளமான வேலைவாய்ப்புகளை பறிக்கும் நிலை நிச்சயம் வரும். எனினும், இதுபோன்ற சூழல் இன்னும் இருபது ஆண்டுகளில் உருவாவதும் கடினம் தான். தொழிலாளர்கள் மத்தியில் ஏ.ஐ. ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கம் பற்றி தற்போதைக்கு எதையும் கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஏ.ஐ. என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்ததில் இருந்தே, அவை பற்றிய வியப்பான பார்வை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இதே போன்று அவை மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடுமோ என்ற அச்ச உணர்வும் மேலோங்கியே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், ஏ.ஐ. குறித்து பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
tech news
பழைய விலையில் ஜியோ அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா – இப்படி செய்தால் அதிகம் சேமிக்கலாம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ்களின் கட்டணத்தை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. விலை உயர்வு தொடர்பான அறிக்கையில், ஜியோ வழங்கும் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பலன்கள் 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ்களில் மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறுவதற்கான விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. எனினும், விலை உயர்வு ஜூலை 3 ஆம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வருகிறது. அந்த வகையில், ஜூலை 3 ஆம் தேதிக்குள் ஜியோ ரீசார்ஜ்களை அதன் பழைய விலையிலேயே பெற முடியும்.
விலை உயர்வு காரணமாக நீங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள ரீசார்ஜின் வேலிடிட்டி ஜூலை 3 ஆம் தேதியோடு நிறைவு பெறாது. ஜூலை 3 ஆம் தேதிக்கு பிறகும் சேவைகள் அதன் பழைய நிலையிலேயே சீராக இயங்கும். ஜூலை 3 ஆம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்யும் போதுதான் உங்களுக்கான விலை உயர்வு அமலுக்கு வரும்.
அந்த வகையில் ஜியோ அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா சேவையில் பயன்பெற விரும்புவோர் ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் உடன் மற்றொரு ரீசார்ஜ்-ஐ பழைய விலையிலேயே மேற்கொள்ள முடியும். ஜூலை 3 ஆம் தேதிக்குள் பயனர்கள் ஜியோ ரீசார்ஜ் சலுகைகளை அதன் பழைய விலையிலேயே செய்து கொள்ளளாம்.
அந்த வகையில், பயனர்கள் 2 வருடாந்திர ரீசார்ஜ்களை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி சலுகையை பெற முடியும். ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதில் ஏர்டெல் நிறுவன விலை உயர்வு ஜூலை 3 ஆம் தேதியும், வோடபோன் ஐடியா விலை உயர்வு ஜூலை 4 ஆம் தேதியும் அமலுக்கு வர இருக்கிறது.
tech news
இனி வாட்ஸ்அப் இந்த சாதனங்களில் வேலை செய்யாது – வெளியான புது லிஸ்ட்
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இவை பயனர் தகவல் பரிமாற்ற அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளன.
தற்போது உலகின் ஏராளமான சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை கொண்ட சாதனங்கள் அதிகம் எனலாம். அவ்வப்போது புது அம்சங்கள் மூலம் செயலியை அப்டேட் செய்து வரும் நிலையிலும், வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாதனங்களில் நிறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் செயலி மொத்தம் 35 மொபைல் போன்களில் வேலை செய்யாது என கூறப்படுகிறது. இந்த பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, ஹூவாய், சோனி, எல்.ஜி. மற்றும் ஆப்பிள் என முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் உள்ள மாடல்கள் பெரும்பாலும் மிகவும் பழைமை வாய்ந்தது ஆகும்.
இவற்றில் உள்ள ஹார்டுவேர் காரணமாக சாதனங்களை அப்டேட் செய்ய முடியாமல், பயனர்கள் அதில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். தற்போதைய அறிவிப்பின் படி ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் பிறகு வெளியான ஆண்ட்ராய்டு ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ். 12 அல்லது அதற்கு பிறகு வெளியான ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்த மெட்டா நிறுவனம் பரிந்துரைக்கிறது.
வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் சாதனங்கள் பட்டியல்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏஸ் பிளஸ், கேலக்ஸி கோர், கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2, கேலக்ஸி கிராண்ட், கேலக்ஸி நோட் 3 N9005 LTE, கேலக்ஸி நோட் 3 LTE+, கேலக்ஸி S 19500, கேலக்ஸி S3 மினி VE, கேலக்ஸி S4 ஆக்டிவ், கேலக்ஸி S4 மினி 19190, கேலக்ஸி S4 மினி 19192 டூயோஸ், கேலக்ஸி S4 மினி 19195 LTE, கேலக்ஸி S4 ஜூம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் மாடல்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5, ஐபோன் 5C, ஐபோன் 6, ஐபோன் 6S பிளஸ், ஐபோன் 6S, ஐபோன் SE மாடல்கள்.
tech news
பவர்ஃபுல் பிராசஸருடன் CMF போன் 1 – சூப்பர் டீசர் வெளியீடு
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டு CMF, தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜூலை 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் CMF பட்ஸ் ப்ரோ 2 மற்றும் CMF வாட்ச் ப்ரோ 2 சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதனிடையே புதிய சாதனங்களுக்கான டீசர்களை CMF தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் டீசரில், புதிய CMF போன் 1 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 7300 5ஜி சிப்செட் ஆக்டா கோர் பிராசஸர் ஆகும். இது சமீபத்திய டெஸ்டிங்கில் ஸ்னாப்டிராகன் 782G-ஐ விட சிறப்பாக செயல்பட்டு அசத்தியது. டிமென்சிட்டி 7300 பிராசஸர் TSMC-இன் 4nm ஜென் 2 முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.3, வைபை 6, டூயல் 5ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்கும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி CMF போன் 1 மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மற்றொரு லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் IP52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
tech news
ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து மொபைல் கட்டணத்தினை உயர்த்திய வோடவோன்…
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் மொபைல் கட்டணங்களை தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டண உயர்வு வெளியிட்ட நிலையில் வோடவோன் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது.
பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் 10 சதவீதம் முதல் 23 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 4ந் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 28 நாளுக்கு தினம் 1.5 ஜிபி, அன்லிமிடிட்டெட் கால் கொடுக்கும் 299 ரூபாய் பேக்குகள் 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருடாந்திர கட்டணம் 2899 ரூபாயில் இருந்து 3449 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. மேலும் ஆட் அன் டேட்டா பேக்குகள் 1 ஜிபி 19 ரூபாயில் இருந்து 22க்கு உயர்த்தி இருக்கிறது. 3 நாளைக்கு 6 ஜிபி வழங்கி வந்த 39 ரூபாய் கட்டணம் 48க்கு உயர்ந்து இருக்கிறது.
ஏற்கனவே பெரிய தொகைகளில் இருக்கும் மொபைல் கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து இருக்கிறது. ஜியோவை தொடர்ந்து முக்கிய டெலிகாம் உயர்த்தி இருக்கும் இந்த அறிவிப்புகள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. 5ஜி கட்டமைப்புக்கான முதலீடுகளே இந்த உயர்வுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
tech news
லூமியா ஸ்டைலில் புது போன் உருவாக்கும் HMD
HMD நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கியது அனைவரும் அறிந்தது. நோக்கியா போன்களுடன், HMD பிராண்டிங்கிலும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், HMD நிறுவனம் தனது இரண்டாவது ஸ்கைலைன் போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் HMD ஸ்கைலைன் G2 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தோற்றத்தில் புதிய HMD ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்கைலைன் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்குமா அல்லது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
HMD ஸ்கைலைன் G2 மாடல் மூன்று சென்சார்களை கொண்ட கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதில் எந்த மாதிரியான லென்ஸ்கள் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுற்றி பக்கவாட்டில் இருக்கும் பெசல்கள் மிக மெல்லியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஸ்மார்ட்போனின் மேல் மற்றும் கீழ்புற பெசல்கள் சற்று தடிமனாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
HMD முன்னதாக அறிமுகம் செய்த ஸ்கைலைன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய புது தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
-
india1 day ago
88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்
-
india1 day ago
பறக்கும் விமானத்தில் ஜாலியாக சிகரெட் பிடித்த நபர்!.. அதிர்ச்சி செய்தி….
-
latest news2 days ago
நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை: பும்ராவுக்கு மற்றொரு சாதனை.. பும் பும்-னா சும்மா நினைச்சியா?
-
tech news1 day ago
ஸ்மார்ட்போனிற்கு ரூ. 18,000 தள்ளுபடி அறிவித்த சாம்சங்
-
Cricket10 hours ago
டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்
-
tech news1 day ago
லூமியா ஸ்டைலில் புது போன் உருவாக்கும் HMD
-
Cricket1 day ago
விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்