Connect with us

latest news

இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும்.. சியோமி இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு!

Published

on

Xiaomi-Mi-11-Ultra

சியோமி இந்தியா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் வாரண்டியை நீட்டித்து இருக்கிறது. புதிய அறிவிப்பை சியோமி இந்தியா நிறுவனம் தனது டிஸ்கார்டு தளத்தில் தெரிவித்து இருக்கிறது. இதே தகவல் சியோமி இந்தியாவின் டுவிட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களில் இடம்பெறவில்லை.

புதிய அறிவிப்பின் படி வாரண்டி நீட்டிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை சியோமி தெரிவித்து இருக்கிறது. புதிய வாரண்டியின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர், அதில் ஏற்பட்டு இருக்கும் சிலவகை கேமரா அல்லது மதர்போர்டு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கொள்ளலாம். திடீரென ஸ்மார்ட்போன்களின் வாரண்டி நீட்டிக்கப்பட்டதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

#RedmiNote10ProMax

சில சாதனங்களில் பிழை ஏற்பட்டு இருப்பதை சியோமி கண்டறிந்திருக்கலாம். இதன் காரணமாகவே இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் சியோமி நிறுவனம் இந்த வாரண்டி மூலம் இலவச சர்வீஸ் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. காரணம் எதுவாயினும், இது பயனர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரச்சினைகள் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர், இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெற முடியும்.

தற்போது வரை சியோமி நிறுவனம் புதிய வாரண்டி நீட்டிப்பு பற்றிய தகவலை தனது சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. எனினும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

வாரண்டி நீட்டிக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள்:

சியோமி Mi 11 அல்ட்ரா, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 10 மற்றும் போக்கோ X3 ப்ரோ போன்ற மாடல்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாரண்டி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவலை லீக்ஸ்டர் டெபாயன் ராய் கண்டறிந்து தெரிவித்தார்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய வாரண்டியை பெற முடியும். இத்துடன் செல்ஃபி கேமரா மற்றும் மதர்போர்டு சார்ந்த பிர்ச்சினைகளை இந்த வாரண்டி மூலம் சரிசெய்து கொள்ளலாம். ரூட் செய்யப்பட்ட சாதனங்கள், திர்வங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடல்கள், உடைந்த நிலையில் இருக்கும் மாடல்கள் மற்றும் உடைந்த நிலையில் இருக்கும் கேஸ்களை கொண்ட சாதனங்களுக்கு இந்த வாரண்டி பொருந்தாது.

வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள சியோமி சர்வீஸ் செண்டர் சென்று வாரண்டியை பெற்றுக் கொள்ளலாம். அங்கு வாடிக்கையாளர்கள் தங்களது சாதனத்தின் இன்வாய்ஸ்-ஐ சமர்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். புதிய வாரண்டியின் கீழ் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய சியோமி எவ்வித கட்டணமும் வசூலிக்காது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!

Published

on

ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.

விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது.  இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது.  அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Continue Reading

india

திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!

Published

on

கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .

திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.

இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

Continue Reading

latest news

வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

Published

on

கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரிஜு விஜயன். இவரின் மனைவி பிரியா நாயர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா நாயருக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். மேல் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.

வாரம் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை சிகிச்சைக்காக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் பலரிடமும் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் அவரிடம் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Continue Reading

latest news

146 பழங்குடியின இளைஞர்களுக்கு… பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் மு க ஸ்டாலின்…!

Published

on

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பொறியியல், தொழில்நுட்பக் கல்வி, ஐடிஐ, பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

அதன்படி மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் 450 பேரை திரட்டி பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதன் முடிவில் 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி சென்னை கலைவாணரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 200 பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி அணை வழங்கப்பட்டது.

இந்த 200 பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாதம் காலம் பயிற்சி வழங்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து அதில் திறம்பட பயிற்சி பெற்ற இளைஞர்களில் 146 இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி இருந்தார். 146 இளைஞர்களின் 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

latest news

அரசு வழங்கும் 1000 ரூபாய் வேண்டுமா…? புதிய பயனாளர்கள் இணைப்பு… உடனே விண்ணப்பிங்க..!

Published

on

தமிழகத்தில் இந்த மாதம் முதல் புதிதாக 1.48 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களின் சுயமரியாதையை காத்திடும் வகையில் தமிழக அரசால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை தற்போது விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு தமிழக அரசால் சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட் மின்சாரத்திற்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் விண்ணப்பிப்பவர்கள் கார், ஜீப் போன்ற எந்த ஒரு வாகனங்களையும் வைத்திருக்கக் கூடாது. அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலுக்குள் வருபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அதேசமயம் இந்த திட்டத்தில் இணைந்த பிறகு யாராவது கார் வாங்கினாலோ, அரசு வேலைக்கு சென்றாலோ, ஆண்டு வருமானம் அதிகரித்தாலோ அவர்கள் பயனாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களும் இந்த திட்டத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு பரிசீலித்து அவர்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்கப்பட்டு வருவார்கள். 21 வயது நிரம்பிய குடும்பத் தலைவிகள் இ சேவை மையம் மூலமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Continue Reading

Trending

Exit mobile version