Categories: tech news

மூன்றாக மடிக்கலாம்.. புது சியோமி போன் வெளியீட்டுக்கு ரெடி.. லீக் ஆன தகவல்..!

சியோமி நிறுவனமும் புதுவகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை உள்ள மாடல்களை விட வித்தியாசமாக இருக்கும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை மூன்றாக மடித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான மற்றொரு தகவல்களில் ஹூவாய் நிறுவனம் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இந்த வரிசையில், தற்போது சியோமி நிறுவனமும் மூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவை சேர்ந்த சியோமியின் புதிய வகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. இது குறித்த விவரங்களை டிப்ஸ்டரான ஸ்மார்ட் பிக்காச்சு வெய்போ தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சியோமி நிறுவனமும் மூன்றாக மடித்து வைத்துக் கொள்ளும் வகையிலான புது ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மாடல் வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல், மூன்று வெவ்வேறு திரைகள் தனித்தனியாக வித்தயாசப்பட்டு காட்சியளிக்கும். இவற்றை பிரித்தால், உள்புறத்தில் இந்த ஸ்மா்ட்போன் மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அளவீடுகளில் இந்த மாடல் டேப்லெட் போன்ற உணர்வை கொடுக்கும். மடிக்கப்பட்ட நிலையில், இது வழக்கமான ஸ்மார்ட்போன் அளவிலேயே கிடைக்கும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் சியோமி நிறுவனம் தனது முதல் ப்ளிப் போன் மாடல்- சியோமி மிக்ஸ் ப்ளிப்-ஐ அறிமுகம் செய்த நிலையில், தற்போது மூன்றாகக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago