Uncategorized
‘ECIL’ நிறுவனத்தில் 47 பணியிடங்கள்..! டிப்ளமோ முடித்திருந்தால் போதும்…உடனே அப்ளை பண்ணுங்க..!
![ECIL Recruitment 2023 - Cinereporters Info ECIL Recruitment 2023](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/ECIL-Recruitment-2023.jpg)
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) என்பது இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமாகும். புதுமை மற்றும் உள்நாட்டுமயமாக்கலில் உத்வேக மின்னணுவியல் துறையில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நெட்வொர்க் & உள்நாட்டுப் பாதுகாப்பு, CBRN மற்றும் மின்-ஆளுமை போன்ற உத்தி சார்ந்த துறைகளில் ECIL செயல்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது, ஒப்பந்த கால அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
ECIL நிறுவனம் திட்டப் பொறியாளர் (7), தொழில்நுட்ப அதிகாரி (28), உதவி திட்டப் பொறியாளர் (12) ஆகிய பணிகளில் காலியாக உள்ள 47 பணியிடங்களை நிரப்ப உள்ளது. பணியிட விவரங்களுக்கு Annexure-I என்ற அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 33க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பதாரர்கள் Application Form பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்ப வேண்டும்.
- அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
- குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்
- நேர்காணல் முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
-
ECIL Recruitment
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.24,500 முதல் ரூ.55,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
india
கடந்த 10 ஆண்டுகளை விட அடுத்த ஐந்து ஆண்டுகள் தான்… மாநிலங்களவையில் பேசிய மோடி
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் பேசி இருந்தார். பல முக்கிய விஷயங்களை அவ்வுரை உள்ளடக்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி பேசியதில் இருந்து, குடியரசு தலைவரின் உரை நாட்டு மக்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் நிறைந்ததாக இருந்தது. 6 தகாப்தங்களுக்கு பிறகு ஒரு கட்சி 10 வருடங்களை தாண்டி ஆட்சியில் இருப்பது அசாதாரண நிகழ்வு. ஆனால் சிலர் அதன் முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்.
10 ஆண்டுகளாக நாங்கள் செய்த அர்ப்பணிப்பு பணிகளுக்கு நாட்டு மக்கள் தங்கள் ஆதரவை தந்துள்ளனர். எனது நாட்டு மக்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். பாபா சாகேப் அம்பேத்கர் அளித்த சட்டத்தால் என்னை போன்ற பலர் இங்கு வர முடிந்தது. நடந்து முடிந்த தேர்தல் எங்கள் 10 ஆண்டுகால ஆட்சிக்கு மைல்கல் மட்டுமல்ல.
எதிர்கால தீர்மானங்களுக்கு மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதற்கான அத்தாட்சி. நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சி வெறும் தொடக்கம் தான். இன்னும் பல படிகள் நாம் வளர இருக்கிறோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுப்படுவோம். இந்தியா மூன்றாம் பொருளாதாரமாக மாறும்போது அதன் தாக்கம் அனைத்து துறைகளில் இருக்கும் என பெருமையாக கூறுகிறேன். கொரோனா போன்ற பேரிடர்களை சந்தித்தும் நாடு வளர்ச்சி பாதையில் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளக்குறிச்சி ‘விஷ சாராயம்’… சற்றுமுன் வெளியான லேப் ரிப்போர்ட்…
Cricket
13 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை… டி20 சாம்பியனான இந்திய அணி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 சாம்பியனாக முடிசூடியது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, பவர்பிளேவில் ரோஹித், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து கைகோர்த்த விராட் கோலி – அக்சர் படேல் ஜோடி இந்திய அணியின் ரன் வேகத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல், 47 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த ஷிவம் துபே விராட் கோலிக்கு கம்பெனி கொடுக்க அவரும் ஆக்ஷன் மோடுக்கு மாறினார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி, இந்த ஒரே போட்டியில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுக்க முடியுமா என்று நினைத்திருந்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது.
முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் டிகாக்கும் ஸ்டப்ஸும் எதிர் தாக்குதல் ஆட்டம் ஆடினர். ஸ்டப்ஸ், டிகாக் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹென்ரிச் கிளாஸன் மிரட்டலான ஆட்டம் ஆடினார். கடைசி 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்கிற நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் வீசிய 14-15வது ஓவர்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா 38 ரன்களை எடுத்தது. குறிப்பாக அக்சரின் 15-வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது.
கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் என்ற நிலையில், கிட்டத்தட்ட மேட்ச் இந்தியாவின் கையைவிட்டு போய்விட்டது என்றே நினைத்தனர். ஆனால், 16-வது ஓவரை வீசிய பும்ரா, கடைசி வரைக்கும் சண்ட செய்வோம்னு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தார். 17-வது ஓவரில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி பாண்டியாவும் மறுமுனையில் பிரஷரை ஏற்றினார்.
அடுத்த ஓவரில் மார்கோ யான்சனை வீழ்த்தியதோடு 2 ரன்களை மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் 20 ரன் தேவை. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தனது பங்குக்கு நெருக்கடியை அதிகரித்ததோடு 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவை. 16-19 இடையிலான 4 ஓவர்களில் இந்தியா 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தது மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. பாண்டியா வீசிய முதல் பந்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் அட்டகாசமான கேட்ச் பிடித்து கில்லர் மில்லரை வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2007-க்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது.
tech news
50எம்பி கேமரா, அட்டகாசமான சிப்செட்..ஒன்பிளஸ்-ன் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்..! எப்போ அறிமுகம் தெரியுமா..?
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 உடன் கூடிய கலர் ஓஎஸ் உள்ளது.
OnePlus Ace 2 Pro
டிஸ்பிளே:
ஏஸ் 2 ப்ரோ ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 1.5K வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா:
இதில் 50எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராவைக் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்காக 16எம்பி ஷூட்டர் உள்ளது.
OnePlus Ace 2 Pro
பேட்டரி:
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இதனை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் சீக்கிரமாக மொபைலை சார்ஜ் செய்ய முடியும். இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
ஸ்டோரேஜ்:
ஏஸ் 2 ப்ரோ 24 ஜிபி LPDDR5X ரேம்-ஐக் கொண்டிருக்கலாம். மேலும் இது 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று விருப்பங்களிலும் கிடைக்கும். 256ஜிபி வரை இண்டெர்னெல் ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டுள்ளது. இதனை 1டிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.
Uncategorized
அவருக்கு பதிலாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்! ஜாகீர் கான் கருத்து!
வெஸ்ட் இண்டீஸ் எனக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி டிராவாக முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஷ்வின் மொத்தமாக 12 விக்கெட் எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் மொத்தமாக ஐந்து விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்து தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்படாமல் முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.இதனையடுத்து, அஷ்வினுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என இந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் அருமையாக செயல்பட்டார். அவருடைய பந்துவீச்சு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. அவர் மொத்தமாக 15 விக்கெட் எடுத்திருந்தார். எனவே, சிராஜ்க்கு கொடுத்த அந்த ஆட்டநாயகன் விருது அஸ்வினுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும்.
பந்துவீச்சில் மட்டுமின்றி அஷ்வின் பேட்டிங்கிளும் அருமையாக விளையாடினார். ரோஹித், விராட் கோலி போன்ற பெரிய பெரிய வீரர்கள் சதம் முதல் அரைசதம் விளாசிய நிலையில், அஸ்வினும் அரை சதம் விளாசினார். எனவே அவருக்கு கண்டிப்பாக ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.
Uncategorized
அப்பாடா இதுக்குதான் காத்திருந்தோம்..வாட்ஸ் ஆப்பில் அனைவருக்கும் தேவையான வசதி அறிமுகம்..
பிரபல மெட்டாவின் ஒரு நிறுவனமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டுதான் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுவாக வாட்ஸ் ஆப் உபயோகப்படுத்தும் அனைவருமே சந்திக்க கூடிய மிகபெரிய பிரச்சினை நமக்கு தெரியாதவர்களின் எண்ணை நமது காண்டக்டில் சேமிக்காத வரை நாம் அவருக்கு எந்த விதமான செய்திகளையும் அனுப்ப இயலாது.
இந்த மாதிரியான அன்னியர்களின் எண்ணை நாம் சேமிப்பதின் மூலம் நமது சுயவிவர படத்தினை மற்றவர்கள் எளிதில் திருடிவிடும் அபாயமும் உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்காக வாட்ஸ் ஆப் நிறுவனமானது தற்போது மிகவும் பயனுள்ள வசதியின் தன்னுடைய செயலியில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆம் இனி நாம் நமkகு தெரியாதவர்களின் எண்ணை சேமிக்க வேண்டிய் அவச்சியம் இல்லை. நாம் அவர்களின் எண்ணை சேமிக்காமலே இனி அவர்களுக்கு நாம் செய்திகLai பரிமாறி கொள்ள முடியும். இதற்கு நாம் வாட்ஸ் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கமோ அல்லடு அப்டேட்டோ செய்து கொள்ள வேண்டும்.
whats app new features
இதனை எவ்வாறு உபயோகிப்பது?:
- முதலில் contact list ஐ திறக்கவும். ஒருவேளை நீங்கள் iOSல் வாட்ஸ் ஆப்பினை உபயோகப்படுத்தினால் “Start New chat” என்ற பட்டனை அழுத்தவும்.
- தற்போது தேடுதல் பெட்டகத்தில் அதில் அந்த நபரின் எண்ணை கொடுக்கவும்.
- நாம் செலுத்திய நபர் வாட்ஸ் ஆப் உபயோகப்படுத்தினால் அவருக்கான chat box திறக்கும். பின் நாம் நமது செய்திகளை பரிமாறி கொள்ளலாம்.
இந்த வசதியின் மூலம் நமது Profile Pictures அனைத்துமே பாதுகாப்பானதாக இருக்கும். இது வாட்ஸ் ஆப்பில் உள்ள ஒரு மிக சிறந்த வசதி. இதனை நாம் உபயோகித்து கொள்வோம்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
latest news22 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news20 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி
-
tech news4 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
Cricket2 days ago
ரோடுஷோனா இப்படி இருக்கனும்: ஸ்தம்பித்த மெரைன் டிரைவ்.. சாம்பியன்களுக்கு அதிரிடி வரவேற்பு..!