கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை. திடீரென உச்சக்கட்டத்தை அடைந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. மாத இறுதியில் விலை வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியது. செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளான நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்திருந்தது.
ஏழாயிரம் ரூபாயை கடந்து தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வந்த தங்கத்தின் விலை படிப்படியக குறைந்து வருகிறது. நேற்று பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனை செய்யப்பட்டது ஒரு கிராம் தங்கம் . சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையானது.
நேற்றைப் போலவே இன்றும் சென்னையின் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிராம் ஒன்றிற்கு நேற்றை விட முப்பது ரூபாய் குறைந்து ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்ப்டுகிறது இன்று.
இதனால் ஒரு சவரன் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்துள்ளது. ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-) நேற்று விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயாக (ரூ.56,400/-)உள்ளது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் ஏதும் காணப்படவில்லை. நேற்று ஒரு கிராம் நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட வெள்ளி இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) உள்ளது.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…
இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத்…