Uncategorized
தடாலடி காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கும் விலை உயர்வு?…
மத்திய அரசு நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தங்கத்தின் விலையில் சில நாட்களாகவே அதிரடி மாற்றங்கள் இருந்து வந்தது. பட்ஜெட் தாக்கலான நாளில் இரண்டு முறை விலை குறைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களுக்கு அதே விலை குறைவு நீடித்தத்து. தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக இந்த விலை இறக்கம் இருந்து வந்தது.
அதன் பின்னர் விலை உயர்வில் சின்ன சின்ன மாற்றங்களை காட்டியது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவதால் தங்கத்தின் மீதான தாக்கமும் இங்கே அதிகரித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை தான் தங்க விலையை நாள் தோறும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் உயர்ந்து ஆறயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.6480/-) விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை (ரூ.51,840/-) ஐம்பத்தி ஓராயிரத்து என்னூற்றி நாற்பது ரூபாயாக இருந்து வருகிறது.
அதே போலத் தான் வெள்ளியின் விலையிலும் இன்று சிறிய மாற்றம் இருந்தது. நேற்று விற்கப்பட்டதை விட இன்று கிராம் ஒன்றிற்கு எழுபது காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று தொன்னூற்றி ஓரு ரூபாய் எழுபது காசுகளுக்கு (ரூ.91.70/-) விற்பனையாகி வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஓராயிரத்து எழனூறு ரூபாயாக (ரூ.91,700/-) உள்ளது. இறங்குமுகத்தை காட்டி வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென ஏறுமுகத்தை நோக்கி செல்வது ஆபரணப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
Uncategorized
இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில் ஆதீக்கம் செலுத்தி, விளையாட்டை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அணிகளாக திகழ்ந்து வந்தது. அதிலும் வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேகப் பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய பேட்ஸ்மேன்கள் தான் அதிகம்.
பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினாலும், வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியை பற்றி பேசினாலே நினைவில் வருவது அவர்களது பவுலர்களும், அவர்களின் அதிவேக பந்து வீச்சும் தான்.ஆஸ்திரேலிய அணியும் பின் நாட்களில் இந்த விளையாட்டில் தனது ஆதிக்கத்தை துவங்கி இப்போது வரை தனக்கென ஒரு தனி இடத்தை கைவசப்படுத்தியே வைத்திருக்கிறது.
வேகப் பந்து வீச்சால் எதிரணியை கலங்கடித்த வெஸ்ட் இன்டீஸ் அணி இப்போது கிரிக்கெட் விளையாட்டை புதிதாக விளையாடி வரும் கத்து குட்டி அணி போல செயல் பட்டு வருகிறது. 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தி வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஈடாக கிரிக்கெட் விளையாடுவதில் நாங்களும் குறைந்தவர்கள் அல்ல என நிரூபித்தது.
அதன் பின்னர் இந்த போட்டியில் இந்திய அணி தனக்கான இடத்தை இன்று வரை உறுதி செய்து வருகிறது. ஆரம்பத்தில் இந்திய அணி என்றாலே பேட்டிங்கிற்கு பெயர் போன அணியாக பார்க்கப்பட்டது.
ஆல்-ரவுண்டர் கபில் தேவிம் பந்து வீச்சுக்கு இணையான பந்து வீச்சாளர்களை தேடியது இந்திய அணி துவக்கத்தில் கவாஸ்கர், டெண்டுல்கர், அசாருதீன், டிராவிட், கங்குலி, லெட்சுணன், சேவாக், மஞ்சிரேக்கர், அஜய் ஜடேஜா, கம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, விராத் கோலி, தோனி, ரோஹித் சர்மா, என அடுக்கிக்கொண்டே போகலாம் பேட்ஸ்மேன்களை.
ஆனால் கபில்தேவ், ஸ்ரீநாத், கும்ளே, ஹர்பஜன் சிங் என ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய அளவிலான பவுலர்கள் சொற்பமாக இருந்து வந்த நேரமும் உண்டு.
இது குறித்து கருத்து சொல்லியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஷமி – ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் போன்றவர்களின் வருகைக்கு பிறகு தான் இந்திய அணியின் பவுலிங் பற்றி அதிகமான பேச்சுகள் வரத்துவங்கியிருக்கிறது என்றிருக்கிறார். இந்திய அணி பவுலர்களுக்கான அணியாகவும் மாற இவர்களே காரணம் என்றார்.
பவுலிங்கிலும் இந்திய அணி சிறந்தது என பார்க்க காரணமாக இருப்பவர்கள் இவர்கள் என சொல்லியதோடு பும்ராவை பற்றியும் பேசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என பும்ராவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
latest news
ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் அனேக கோவில்களில் பிரசாதமாக தயிர் சாதம், லெமன் சாதம், கற்கண்டு சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், பொங்கல், சக்கரைப் பொங்கல் போன்றவை வழங்கப்படும்.
ஆனால் கோவில் திருவிழா ஒன்றில் பிரசாதமாக ப்ரோட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார்கள். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வெளியூர்களில் பணி செய்பவர்களும் ஆர்வத்துடன் பங்கற்று வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தப்படும் இக்கோவில் திருவிழாவின் இந்தாண்டு திருவிழா தினசரி பூஜைகளுடன் பக்தி மயமாக கொண்டாடப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் கலைகட்டியிருந்தது.
இந்நிலையில் திருவிழாவின் இறுதி நாள் அன்று பக்தர்களுக்கு ப்ரோட்டா பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பத்தாயிரம் ப்ரோட்டாக்கள் தயார் செய்யப்பட்டதாக விழாக்கமிட்டி சார்பில் சொல்லப்பட்டது.
கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ப்ரோட்டாவை பிரசாதமாக வழங்கபட்டதாக சொல்லப்பட்டது. இப்படி வித்தியாசம் காட்டுவதால் அடுத்த ஆண்டு வரை பகதர்களின் நினைவில் பத்திரகாளி அம்மன் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் நிற்கும் எனவும் சொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு திருவிழாவின் போது சப்பாத்தி வழங்கப்பட்டது அதிக வரவேற்பை பெற்றதால் இந்தாண்டு ப்ரோட்டா வழங்கப்பட்டதாக சொல்லபட்டது.
latest news
நண்பர்களிடையே தகராறு…குடிசைக்கு தீ வைத்த கொடூரம்…
மது குடித்திருந்த நிலையில் நண்பர்கள் இருவருக்கிடையே நடைபெற்ற தகராறில் குடிசைக்கு தீ வைத்த போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மலமலவென பற்றி எரிந்த தீ அருகில் இருந்த குடிசைகள் மீதும் பரவியது.இதனால் அருகில் இருந்த நான்கு குடிசைகளிலும் தீ பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் குடிசைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. குடிபோதையில் இளைஞர் செய்த இந்த கொடூர காரியம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பிரசாந்த். தனது வீட்டின் அருகே நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பிரசாந்த் மற்றும் அவரது நண்பரான நவாசும் போதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், பிரசாந்த் மற்றும் நிவாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றிப்போன நிலையில் பிரசாந்த் தாக்குதலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அருகில் இருந்த குடிசைக்குள் சென்று ஒளிந்ததாகவும், ஆத்திரத்தில் இருந்த அந்த போதை ஆசாமி பிரசாந்தை பழி வாங்கும் நோக்கத்தில் பிரசாந்த் ஒளிந்திருந்ததாக சொல்லப்படும் குடிசைக்கு தீ வைத்திருக்கிறார்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்த இந்த சம்பவம் என்பதால் குடிசைகள் பற்றி எரிவது அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தெரியவில்லை. இந்நிலையில் குடிசையில் வைக்கப்பட்ட தீ மலமலவென அருகிலிருந்த குடிசைகளுக்கும் பரவியது.
சிறுது நேரத்திற்கு பிறகு குடிசைக்குள் இருந்தவர்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே படுத்து தூங்கிக்கொண்டிருந்த தங்களது குழந்தைகளுடன் வெளியேறியுள்ளனர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது நிம்மதி பெரு மூச்சு விட வைத்தது.
ஆனாலும் இந்த சம்பவத்தில் நான் கு குடிசைகள் முற்றிலும் தீயில் கருகியிருக்கிறது. குடிசைவாசிகளின் உடமைகள் அனைத்தும் தீயில் கருகி விட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்லியிருந்தனர். போதையில் குடிசைக்கு தீ வைத்த நபரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Cricket
லிஸ்ட் பெருசா இருக்கே.. 2 இன்னிங்ஸில் எக்கச்சக்க சாதனைகளை படைத்த ஜோ ரூட்..!
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி கடந்த 29 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்து, புது சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை குவித்தது. இதில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 143 ரன்களை குவித்திருந்தார். இவர் தவிர அந்த அணியின் கஸ் அட்கின்சன் 118 ரன்களை குவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை சார்பில் முதல் இன்னிங்ஸில் கமிண்டு மென்டிஸ் மட்டும் 74 ரன்களை அடித்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வந்த இங்கிலாந்து அணிக்கு பேட்டர்கள் சறுக்கினர். எனினும், ஜோ ரூட் நிதானமாக ஆடி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். 103 ரன்களை எடுத்த நிலையில், இவரும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்களை குவித்தது. இதன் மூலம் அந்த அணி இலங்கைக்கு 483 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் வைத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை அடித்த ஒரே வீரர் ஆகியுள்ளார் ஜோ ரூட்.
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக கிரஹாம் கூச் சாதனையை தகர்த்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஏழாவது சதம் அடித்துள்ளார். இதுவரை எந்த வீரரும் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் இத்தனை சதங்களை அடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிவேக சதத்தை அடித்து அசத்தினார் ஆனார் ஜோ ரூட். 111 பந்துகளில் ஜோ ரூட் சதம் அடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ஆவது கேட்ச் பிடித்த வீரர் ஆகியுள்ளார். இங்கிலாந்து அணியில் இத்தனை கேட்ச் பிடித்த ஒற்றை வீரராகியுள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்தும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இலங்கை அணி இன்னும் 430 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம். மறுபக்கம் பந்துவீச்சில் மிரட்டும் பட்சத்தில் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முடியும்.
Uncategorized
வீடியோ காலில் AR Filter-கள்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சார்ந்த அம்சங்களை வீடியோ கால் சேவையில் புகுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் புது அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த அம்சம் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன் இன்ஸ்டால் செய்திருக்கும் டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்குமான வெர்ஷனில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய அம்சம் கொண்டு வீடியோ கால் பேசும் போது பயனர் முகத்தில் அழகிய ஃபில்ட்டர்களை வழங்குகிறது. இது பயனர்கள் வீடியோ கால் பேசும் போதே ரியல் டைமில் தங்களது முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏராளமான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஃபில்ட்டர்களை வைத்துக் கொள்ளச் செய்கிறது. இதை கொண்டு வீடியோ கால் பேசுவோர் தங்களுக்கு பின் என்ன இருக்கிறது என்பதை மறைக்கும் வசதி, பின்னணியில் இருப்பதை நீக்கிவிட்டு அவர்கள் தேர்வு செய்யும் பேக்கிரவுண்ட் படங்களை வைத்துக் கொள்ள உதவுகிறது.
இத்துடன் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் இருந்து பேசும் போதும் முகம் தெளிவாக தெரிய செய்வதற்காக லோ-லைட் மோட் வசதி வழங்கப்படுகிறது. இது பேசும் போது வெளிச்சத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். மேலும் புது அப்டேட்டில் வாட்ஸ்அப்-இன் டச்-அப் மோட் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பயனர் முகங்களில் மென்மையாக காட்சியளிக்க செய்யும் வகையில் மாற்றும்.
-
latest news2 days ago
நண்பர்களிடையே தகராறு…குடிசைக்கு தீ வைத்த கொடூரம்…
-
Finance2 days ago
சரிவை சந்தித்த தங்கம் விலை…வீழ்ச்சியடைந்த வெள்ளியின் விலையும்…
-
Cricket2 days ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்
-
latest news2 days ago
என் சர்வீஸ்ல இப்படி நடந்ததில்ல…கொஞ்சமா குடிச்சேன், அவ்ளோ தான்…அதிர வைத்த பஸ் டிரைவர்…
-
latest news2 days ago
சிறுத்தை மாதிரி இருந்தவர்…சிறுத்துப் போய்விட்டார்…திருமாவளவன் மீதான தமிழிசையின் ரைமிங் விமர்சினம்……
-
latest news2 days ago
யுபிஐ பேமெண்ட் உச்சவரம்பு அதிகரிப்பு.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
-
latest news2 days ago
பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை…முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி…
-
Cricket2 days ago
அந்த ஒரு சாதனை மட்டும் போதுமாம்.. அஸ்வினின் ஆசை நிறைவேறுமா?