தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வந்து கொண்டிருக்கிறார் இவர்.
ரஜினியின் நடிப்பில் தயாராக உள்ள “வேட்டையன்” திரைப்படம் இந்த மாதம் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் டிரையலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப் பட உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அவர். ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும், வீக்கமும் கண்டறியப்பட்டது.
அவருக்கு சிகீட்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர் குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என சொல்லியிருந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்திருக்கிறார் பிரதமர் மோடி. ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், ரஜினியின் உடல் நிலை குறித்த விவரங்கள் பற்றி கேட்டிருக்கிறார்.
அதோடு ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக பிரதமர் மோடி லதா ரஜினிகாந்திடம் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த்
அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும்…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…
பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…