நகரங்கள்; தேர்வு மைய வாரியாக நீட் ரிசல்ட்… உச்ச நீதிமன்றம் அதிரடி!

நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கைது படலங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு முக்கிய உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக முழுமையான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

மேலும், வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், அன்றைய மதியத்திற்குள் வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என நீதிபதிகள் அறிவித்து, நீட் தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்தபோது, அதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி திங்கட்கிழமை வழக்கின் விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்.

AKHILAN

Recent Posts

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

18 mins ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

47 mins ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

9 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

10 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

10 hours ago

INDvsBAN டி20 தொடர்.. இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள்..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட…

11 hours ago