வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைச் சந்திக்க ஓரிரு நாட்கள் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி முதன்முறையாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்குச் சென்றார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மெய்தி மற்றும் குக்கீ என இருதரப்பு மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடையே பேசுகையில், `நான் இங்கு உங்களின் சகோதரனாக வந்திருக்கிறேன். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக உங்களுடன் சேர்ந்து உழைக்கவே இங்கு வந்திருக்கிறேன்’ என்று நம்பிக்கை அளித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, `பிரதமர் மோடி இங்கு வர வேண்டும் என்பதை முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். இங்கு வந்து மணிப்பூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர் காது கொடுத்து கேட்க வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். என்ன இருந்தாலும் மணிப்பூர் நமது இந்திய ஒன்றியத்தின் பெருமைமிகு அங்கம்தானே… பிரதமர் மோடி, ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். அது மணிப்பூர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
கடந்த 2023 மே மாதத்தில் நடந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதத்தில் முதல்முறையாக மணிப்பூர் சென்றிருந்த ராகுல், பாரத் ஜோடா யாத்திரைக்காகக் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக சென்றார். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இப்போது மூன்றாவது முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார் ராகுல் காந்தி.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…