Categories: Uncategorized

அச்சத்தில் இருக்கும் பாஜக அமைச்சர்கள்…ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு…

பாரதிய கட்சியில் இருக்கும் அமைச்சர்களே அவர்களது ஆட்சியில் பயத்தோடே தான் இருந்து வருகிறார்கள் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். அதோடு தாமரை வடிவிலான சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் அச்சத்திலேயே இருக்கும் வண்ணத்தில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு அன்மையில் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் பட்ஜெட் மீதான தங்களது கடுமையான விமர்சனங்களையும், சாடல்களையும் சொல்லி வந்து படியே உள்ளனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். தாமரை வடிவில் சக்கர வியூகம் அமைத்து மக்களை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்றார்.

Modi Amit Shah

அச்சம் என்னும் சக்கர வியூகத்தை அமைத்து மக்களை பயமுறுத்தி வருகின்றனர் மோடி, அமித் ஷா இருவரும் எனவும், மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டது போல் மோடி மற்றும் அமீத் ஷாவால் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சக்கர வியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கி உள்ளனர் என்றார். சக்கர வியூகம் அமைத்து நாட்டு மக்களை கொள்ளை அடித்து வருகின்றனர் என தனது கடுமையான குற்றச்சாட்டினையும், விமர்சனத்தையும் முன் வைத்து பேசினார்.

நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இந்த ஆட்சியில் அச்சத்தில் உள்ளனர். அதே போல தான் இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அதன் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும் போது சொல்லியிருந்தார் ராகுல் காந்தி.

sankar sundar

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago