சென்னை பெரிய மேடு பகுதியைச் சேர்ந்து பெண் கல்லூரியில் படித்து வந்து கொண்டிருக்கிறார். கல்லூரி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூசன் எடுத்து வந்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த பதினேழு வயது மாணவர் ஒருவர் டியூசனில் சேர்ந்திருக்கிறார். டியுசன் வகுப்பிற்கு தவறாமல் வந்திருக்கிறார் அந்த மாணவன்.
இப்படியே போயிக்கொண்டிருந்த போது மாணவனுக்கும், டியூஷன் எடுத்த வந்த கல்லூரி மாணவிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. இவர்கள் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
காதலுக்கு கடுத்த எதிர்ப்பு கிளம்பியதால் தன்னிடம் படிக்க வந்த மாணவரை விட்டு பிரிந்திருக்கிறார் டியூசன் டீச்சரான கல்லூரி மாணவி. தங்களது எதிரியாக வந்த மாணவியின் பெற்றோர்களை பழி வாங்க நினைத்திருக்கிறான் அந்த மாணவன்.
மாணவன் டூ-கே கிட் என்பதால் பழி வாங்கிய விதத்தில் ட்ரெண்டை புகுத்தியுள்ளான். கேஷ் ஆன் டெலிவர் முறையில் ஆன் -லைன் மூலம் பொருட்களை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஆர்டர் போட்டு வந்திருக்கிறான்.
ஆர்ட்ர் டெலிவரி செய்ய வந்த நபர்களிடம் தாங்கள் ஆர்டர் ஏதும் செய்யவில்லை என மாணவியின்பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் ரேபிடோ,ஓலா வாடகை வாகணங்களை எழுபத்தி ஆறு முறை புக் செய்திருக்கிறான். மாணவியின் உயிரிழந்து விட்டதாக வலைதளங்களில் செய்தியை வலம் வர விட்டிருக்கிறான்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்து வந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையின் உதவியை நாடியிருக்கிறார்கள். புகாரின் மீது விசாரணை நடத்திய காவல் துறையினர் மாணவியை காதலித்து வந்த டியூசன் வகுப்பு மாணவன் தான் இந்த செயல்களில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்து சொல்லியிருக்கின்றனர்.
மாணவியின் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் கொடுப்பதற்காகவே மாணவன் இப்படிச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மாணவனின் வயதை காரணமாக கொண்டு உளவியல் ரீதியாக அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு பெற்றோருடன் மாணவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…