தூத்துக்குடி தனியார் ஆலையில் அம்மோனியா வாயுகசிவு- 21 பேர் மயக்கம்!

தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் தமிழ்நாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன்கள் இங்கு பதப்படுத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆலையில் நேற்றிரவு 11 மணியளவில் அம்மோனியா சிலிண்டரில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அம்மோனியா வாயு ஆலை முழுவதும் பரவிய நிலையில், அதை சுவாசித்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 21 பேர் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட அந்தப் பெண்கள் அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதியம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

AKHILAN

Recent Posts

தலைமை பொறுப்புக்கு வர வாரிசாக இருக்க வேண்டும்…வானதி சீனிவாசன் விமர்சனம்…

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திராவிட முன்னேற்றக்…

1 hour ago

அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை…

2 hours ago

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த…

3 hours ago

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…

11 hours ago

ஐபிஎல் 2025: CSK-க்கு சாதகமான Retention ரூல்ஸ்.. எம்.எஸ். டோனி ரிட்டன்ஸ்..!

ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 2025…

11 hours ago

INDvsBAN 2வது டெஸ்ட்: ஒன்பது ஆண்டுகளில் இதுதான் முதல் முறை, இன்றைய ஆட்டம் நடக்குமா?

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மழை…

12 hours ago