World News
கண்ணாடியைத் திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும் – மக்களை திசைதிருப்ப தேசிய கீதத்தை மாற்றிய நாடு!
நைஜீரியாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப நாட்டின் தேசிய கீதத்தை மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் போலா தினுபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் தலைமையிலான ஆட்சி ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், நாட்டின் பணவீக்கம் 28 ஆண்டுகளில் இல்லாத அளவாக 33.20% ஆக உயர்ந்திருக்கிறது.
இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப்போக்கே இந்த நிலைக்குக் காரணம் என நாட்டின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாக போலா தினுபு தலைமையிலான அரசு, தேசிய கீதத்தை மாற்றும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியிருக்கிறது.
சுதந்திரமடைந்த காலம் முதலே நைஜீரியாவின் தேசிய கீதமாக இருந்த `Arise O’ Compatriots’ பாடலுக்குப் பதில் இனிமேல், `We Hail Thee’ பாடல் தேசிய கீதமாகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது நைஜீரியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Cricket
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி வீரரகள் தனது பார்முக்கு வந்து அதிரடியை காட்டத் துவங்கினால் எதிரணி வீரர்கள் எல்லாம் கப்-சிப் என மாறிவிடுவார்கள். அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், அதிரடி பவுலர்களையும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்த அணி. ஜாம்பவான் வீரர்கள் பலர் தங்களது ஓய்வை அறிவித்ததாலும், விளையாட்டினை தொடர முடியாமல் போனதாலும் முன் போல தனக்கான தனித்துவத்தை பெற தொடர்ந்து போராடி வருகிறது இந்த அணி.
இந்நிலையில் சர்வதேச போட்டிகள் அனைத்து விதத்திலிருந்தும் 2021ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நாற்பது டெஸ்ட் போட்டிகள், நூற்றி அறுபத்தி நாலு ஒரு நாள் போட்டிகள், தொன்னூற்றி ஓரு டி-20 போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்விற்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிராவோ. கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில் இருபத்தி நான்காம் தேதி நடந்து முடிந்த போட்டியின் போது பிராவோ காயமடைந்திருந்தார்.
இந்த சூழலில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். கத்து குட்டி அணியாகவே பார்க்கபட்ட அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
latest news
தாயாவதை தடுத்த சம்பவம்…நாயால் நேர்ந்த விபரீதம்…
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதுவும் அவற்றை தங்களது வீட்டில் ஒருவராகவும், குடும்பத்து நபராகவும் பார்த்து வருபவர்கள் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். தங்களது எஜமான்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பெட்டிக்குள் பாம்பாகவும் இருந்து வருகிறது இத்தகைய வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகள்.
சில நேரங்கள் இவைகளால் வீட்டில் வசிப்பவர்களுக்கும் கூட எதிர்பாராத பிரச்சனைகள் வந்து விடத் தான் செய்கிறது, அவைகளின் அறியாமையாலும், அவைகளுக்கே உரிய மிருகத்தனமான புத்தியாலும். நான்கு மாத கர்ப்பிணிப் பெண் வயிற்றில் ஏறிய நாயினால் கருகலைந்த அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் லீ என்பவர் தனது வீட்டின் செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்.
அந்த நாய் நாற்பத்தி ஓரு வயதான பெண்னின் வயிற்றில் ஏறி இருக்கிறது. நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண் வயிற்றில் லீயின் வளர்ப்பு நாய் ஏறியதால் அப்பெண்னின் கரு கலைந்துள்ளது.
லீயின் நாய் செய்த இந்த செயலால் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக் கருவுற்றிருந்த பெண் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அப்பெண்மணிக்கு லீ பத்து லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்து வந்த தொடர் சிகிட்சைக்கு பிறகே தான் கருவுற்றதாகவும், ஆனால் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்து விட்டது எனவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
Cricket
ரெக்கார்டு பிரேக்கிற்கு ரெடியாகும் கோலி…ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா?…
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகளாவிய சாதனைகள் படைத்த வீரர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராத் கோலி.
சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்ப யார் வருவார்? என ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் கவலையோடும், ஏக்கத்தோடும் காத்து நின்ற நேரத்தில் அவதாரம் போல மைதானத்தில் எதிரணி வீரர்களின் பந்து வீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்து தும்சம் செய்த வருபவராக கிரிக்கெட் போட்டிகள் களத்திற்கு வந்து சேர்ந்தார் விராத் கோலி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மூன்று விதாமான பரிணாமாங்களிலும் சாதனை மேல் சாதனைகளை செய்யத்துவங்கினார் விராட் கோலி. களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களை எந்த நேரத்தில் என்ன விஸ்வரூபம் எடுப்பாரோ என்ற அச்சத்தோடே கதிகலங்கி நிற்கச் செய்வதில் வல்லவராகவே தொடர்ந்து வருகிறார்.பல மைல் கற்களை எட்டியுள்ள இவருக்கு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரண்டு சாதனைகளை செய்து முடிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இன்னும் ஐம்பத்தி எட்டு ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதி வேகமாக கடந்த உலகின் முதல் வீரராகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர்.
சர்வதேச அளவிலான இந்த சாதனையை செய்ய வங்கதேசத்திற்கு எதிராக சரியான வாய்ப்பு உருவாகியுள்ள அதே நேரத்தில் வெறும் நூற்றி ஐம்பத்தி இரண்டு ரனகள் மட்டுமே தேவைப்படுகிறது கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கு.
டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச தரத்தில் சற்று பின் தங்கிய நிலையில் இருக்கும் வங்கதேசம் போன்ற அணிக்கு எதிராக விராத் கோலி போன்ற தரமிக்க வீரருக்கு பெரிய விஷயமல்ல என்பதுவே உலகெங்கிலும் உள்ள கோலியின் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது.
Cricket
இந்தியாவிற்கு எதிரான வங்கதேச அணி அறிவிப்பு…சென்னையில் முதல் போட்டி!…
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக பலமிக்க பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே கத்துக்குட்டி அணியான வங்கதேசம் வீழ்த்தியிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை வேதனை அடையச் செய்தது. இந்நிலையில் வெற்றி குதூகலத்துடன் இருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய அணியிலிருந்து பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள பதினாறு பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான இந்த அணியில் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடிய சொரிபுல் இஸ்லாம் மட்டும் சேர்க்கப்படவில்லை.
காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் முந்தைய தொடரில் பங்கேற்ற அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள பங்களாதேஷ் அணியின் பதினாறு பேர் கொண்ட வீரர்களின் விவரம் – நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வருகிற பத்தொன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது.
latest news
வாய்க்குள் வாழ்ந்த கரப்பான்பூச்சி…ஜப்பானில் நடந்த வினோத சம்பவம்!…
பல நூறு அடியிலிருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள், கால் தவறி பக்கத்திலேயே விழுந்து உயிரிழந்தவர்களையும் இந்த உலகம் பார்த்து இருகிறது. இறந்து விட்டதாக நினைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்படும் போது எழுந்து வந்த அதிர்ச்சியை கொடுத்த நபர்களைப் பற்றிய செய்திகளும் சில நேரங்களில் காதில் விழுந்திருக்கிறது.
இப்படிப்பட்ட வினோதமான சம்பவங்களை பற்றியை செய்திகளைப் பார்க்கும் போது ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருக்கும், அதே நேரத்தில் மறுபக்கம் ஆச்சர்யத்தையும் தந்து விடும். இப்படி அதிர்ச்சியும், ஆச்சர்யம் தரக்கூடிய வினோத சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஐம்பத்தி எட்டு வயதாகும் முதியவர் ஒருவர் வழக்கம் போல தூங்கி எழுந்துள்ளார். அப்போது அவரது தொண்டையில் ஏதோ இருப்பதாக உணர்ந்த அவர் அதனை வெளியில் எடுப்பதற்கு பல முறை இருமியுள்ளார். ஆனாலும் அவருக்கு தான் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.
அதன் பின்னர் தனது வாயிலிருந்து ஒரு விதமான துர்நாற்றம் வருவதை உணர்ந்த அந்த முதியவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில் மருத்துவ உதவியை நாட முடிவு செய்தார். மருத்துவரைச் சந்தித்து தனது நிலைமை குறித்து சொல்லியிருக்கிறார். ஐம்பத்தி எட்டு வயது உடைய அந்த நபரை முழுமையாக பரிசோதித்த போது தான் இந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம் தரக்கூடிய வினோதமான நிகழ்வு நடந்திருக்கிறது.
பரிசோதனையின் முடிவில் அந்த நபரின் தொண்டைக்குள் கரப்பான் பூச்சி ஒன்று உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிகிட்சைக்குப் பின் சீனரின் தொண்டையிலிருந்த கரப்பான்பூச்சி அகற்றப்பட்டது. அவரது தொண்டைக்குள் சென்று மூன்று நாட்கள் இருக்கலாம் என்ற அதிர்ச்சியான செய்தியையும் சீனா நாட்டைச் சேர்ந்த அந்த நபரிடம் மருத்துவ தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
-
Cricket2 days ago
ஐபிஎல் 2025.. ரிடென்ஷன் முதல் ஆர்டிஎம் வரை.. வெளியான சூப்பர் தகவல்கள்..
-
Cricket22 hours ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket17 hours ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket22 hours ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
Cricket2 days ago
டெஸ்ட் ரீ-என்ட்ரி.. ஒரே போட்டி.. ரேங்கிங்கில் பட்டையை கிளப்பிய பண்ட்.. எந்த இடம் தெரியுமா?
-
latest news21 hours ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
latest news2 days ago
இது தெரியாம போயிடுச்சே.. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு பெற இதை செய்தாலே போதுமா?
-
Cricket2 days ago
கிரிக்கெட்டில் ரோகித், விராட் கடவுள் மாதிரி.. ஆகாஷ் தீப்