World News
என்னையவா வேலையை வீட்டு தூக்குறீங்க… சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியர்!
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கந்தூலா நாகராஜூ என்கிற இந்தியர் பணிபுரிந்து வந்தார். பணியில் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றுகூறி கடந்த 2022 அக்டோபரில் அவரைப் பணியில் இருந்து நீக்கியது என்சிஎஸ் நிறுவனம்.
அதற்கு முந்தைய ஓராண்டாக என்சிஎஸ் நிறுவனத்தின் தர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக அவர் இருந்து வந்திருக்கிறார். நிறுவனம் சார்பில் உருவாக்கப்படும் புதிய சாப்ட்வேர்களை பரிசோதித்து, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது நாகராஜூ இருந்த குழுவின் மேற்பார்வையில் நடந்து வந்திருக்கிறது.
இவர்கள் என்சிஎஸ் நிறுவனத்தின் தகவல்கள் சேமிக்கப்பட்ட சுமார் 180 சர்வர்களையும் பராமரித்து வந்திருக்கிறார்கள். தன்னை வேலையை விட்டு நீக்கியதில் அதிருப்தி அடைந்த நாகராஜூ, அந்த 180 சர்வர்களிலும் இருந்த தகவல்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம் அவர் மீது சிங்கப்பூர் போலீஸில் புகாரளித்திருக்கிறது.
இதை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் நாகராஜூவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நாகராஜூவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய என்சிஎஸ் நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5.66 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
latest news
என்ன கொடுமடா இது…! ஊதிய உயர்வு கொடுத்ததால் அரெஸ்ட்டான ஓனர்… எதுக்காக தெரியுமா…?
மியான்மர் நாட்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக முதலாளியை கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மியான்மர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கைவிடப்பட்டு தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ தளபதி மின் ஆங்க் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த கடைக்காரரின் மூன்று செல்போன் கடைகளையும் அந்த நாட்டு அரசு மூடி இருக்கின்றது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்தால் இதுவரை 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்து அவர்களின் கடைகளை மூடி இருக்கின்றது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் கைதா? இது என்ன விசித்திரமாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். மியான்மர் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு இருக்கின்றது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் அந்த நாட்டில் பணவீக்கம் இருக்கின்றது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இது அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கும். இது ஆட்சிக்கு எதிராக தூண்டும் வகை என்று அந்த நாட்டு அரசு நம்புகின்றது. இதனால் அந்த நாட்டில் யாருக்குமே ஊதிய உயர்வு என்பது இல்லாமல் இருந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இப்படி அந்த நாட்டு அரசு தொடர்ந்து கடைகளை மூடுவதால் பலரும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
latest news
டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சிறுமி… எலான் மஸ்க் சொன்ன பதில் என்ன தெரியுமா…?
டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சரி செய்து கொடுக்கும்படி சிறுமி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு எலான் மஸ்க் பதிலளித்து இருக்கின்றார்.
உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மாஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான இவர் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றார். இவரிடம் சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றார். அதாவது சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பிய படம் ஒன்றை வரைந்து இருக்கின்றார்.
அப்போது திடீர் திடீரென்று அந்த படங்கள் காணாமல் போனது. இதனால் கவலையடைந்த சிறுமி இது ஒரு பிழை, இதனை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தன்னுடைய செயலை ஒரு வீடியோவாக எடுத்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கை டேக் செய்து பதிவு செய்தார்.
Molly decided to report an important bug to Mr. Musk @elonmusk #Tesla $tsla pic.twitter.com/LgqFEPh7qw
— DriveGreenLiveGreen (@DriveGreen80167) June 30, 2024
அதில் அவர் கூறியிருந்ததாவது “ஹலோ மிஸ்டர் மஸ்க். நான் சீனா மாகாணம் மோலியிலுள்ள பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியதுதான். நான் வரையும் படமானது சில நேரங்களில் மறைந்து விடுகின்றது. பின்னர் இதுபோன்று ஒரு கோடு வருகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் நிச்சயமாக என்று கூறி இருக்கின்றார். இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
latest news
அடேங்கப்பா… இவ்வளவு பெருசா..? உலகின் மிக நீளமான சைக்கிள்.. கின்னஸ் சாதனை படைத்த பொறியாளர்கள்..!
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள் 8 டச்சு பொறியாளர்கள்.
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 180 அடி நீளம் உள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னீ ரியான் என்பவர் 155 அடி நீளம் இருக்கும் சைக்கிளை தயாரித்திருந்தார், இதுதான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த சாதனையை முறியடித்து 180 அடி நீளம் உள்ள சைக்கிள் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த யுவான் ஷால் என்ற 39 வயதான பொறியாளர் சிறு வயது முதலே மிக நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் கனவை நினைவாக்கும் விதமாக தன் நண்பர்களுடன் இணைந்து இந்த சைக்கிளை தயாரித்து இருக்கின்றார்.
இது தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிக நீளமான சைக்கிள் என்ற சாதனை படைத்திருக்கின்றது. உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனையை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் மிக நீளமான சைக்கிள் தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சாதனைகள் முறியடிக்கப்பட்டு தற்போது 180 அடி உயரத்திற்கு வளர்ந்து இருக்கின்றது.
latest news
மாணவர்களுக்கான கல்வி விசா!.. கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலிய அரசு
இந்தியாவில் படிக்க விரும்பாத அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்கா, லண்டன், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார்கள்.
அதில் பலரும் வெளிநாடுகளியே கூட வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி இருக்கிறார்கள். பெரும்பாலும், ரஷ்யாவில் மருத்து படிப்பை படிப்பவர்கள் மிகவும் அதிகம். அதேபோல், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் செல்கிறார்கள். இந்நிலையில், மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசி இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இப்போது பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் கல்வி விசா எடுக்க வேண்டுமெனில் இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் தேவைப்பட்டது. இப்போது ஆண்டனி அல்பனேசி அரசு 89 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் அதிக அளவிலான வெளிநாடு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதை தடுக்கமுடியும் என ஆஸ்திரேலிய அரசு நினைக்கிறது. மேலும், பார்வையாளர் மற்றும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விஷா கேட்டு விண்னப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம், ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ள விசா கட்டணம் அமெரிக்கா, கனடா நாட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
latest news
பாகிஸ்தானில் போட்டு பொளக்கும் வெயில்!. 4 நாட்களில் 450 பேர் மரணம்…
பொதுவாக வெயில் காலம் என்றாலே வெயிலின் வெப்பத்தால் வயது முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் நடக்கும். அதனால்தான் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வதுண்டு. குறிப்பாக கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் கடந்த 4 நாட்களில் வெயிலும் தாக்கத்தால் 450 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தன்னார்வ நிறுவனம் சொல்லி இருக்கிறது. கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த சனிக்கிழமை முதலே கராச்சியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.
3வது நாளிலும் வெயில் குறையாமல் 40 டிகிரி செல்சியசிஸை தாண்டி வெப்பம் நிலவியது. சில இடங்களில் வெப்பக்காற்றும் வீசியது. குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக வெப்பம் காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் 427 உடல்களை பெற்றதாக எதி அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. அதேபோல் மூன்று மருத்துவமனைகளில் இருந்து சித்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை பெற்றதாக கூறியிருக்கிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதி டிரெஸ்ட்டின் தலைவர் ‘கராச்சியில் 4 சவக்கிடங்குகள் செயல்படுகிறது. இப்போது எங்களின் சவக்கிடங்கில் உடல்களை வைக்க முடியாத அளவுக்கு பிணங்கள் நிரம்பி விட்டது. புதிய உடல்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket14 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
latest news21 hours ago
வார இறுதி நாட்கள்… தமிழக முழுவதும் 5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து… வெளியான அறிவிப்பு…!