Connect with us

india

பலாத்காரம் செய்யப்பட்டு… நடுரோட்டில் வீசப்பட்ட பெண்… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவலம்..!

Published

on

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அதிகமாகி கொண்டே செல்கின்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக மட்டுமில்லாமல் இன்னும் இந்த சமூகம் மோக பொருளாகவே பார்க்கின்றது என்பதை நிரூபித்து வருகின்றது.

இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. கடந்த வெள்ளிகிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லியின் சாராய் காலே கான் என்ற பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவற்ற நிலையில் 34 வயதான பெண் ஒருவர் சாலையில் கிடந்திருக்கின்றார்.

ரத்தத்துடன் தோய்ந்த உடைகளுடன் மிக மோசமான நிலையிலிருந்து அவரை அந்த வழியாக வந்த கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்ததில் அவர் ஒரு பட்டதாரி என்றும், அந்தப் பெண் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லி வந்து வேலைக்காக தனது தோழியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

தோழிக்கும் இவருக்கும் சிறிய பிரச்சினை ஏற்படவே அந்த தோழி தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தெருவில் இருந்து இருக்கின்றார். இதை பார்த்த சிலர் அவரை கடத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசி சென்று இருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *