Connect with us

india

நாடி நரம்பெல்லாம் ஐடி ரத்தம் ஊறிப் போயிருக்கு… கோவிலில் வொர்க் ஃப்ரம்… துர்கா பூஜையில் வைரல்…!

Published

on

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிலும் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கோவிலுக்கு அருகே பந்தல் அமைத்து துர்கா அம்மன் சிலையை நிறுவி பலரும் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் பெங்களூரு நகரில் உள்ள பகுதியிலும் நவராத்திரியை ஒட்டி கோவிலுக்கு அருகே துர்க்கை அம்மன் சிலை நிறுவி பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது சாமி தரிசனத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் கையில் லேப்டாப்பை திறந்தபடியும் மறுக்கையில் செல்போனை வைத்துக்கொண்டு வேலை பார்த்தபடியும் பூஜையில் கலந்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நாடி நரம்பெல்லாம் ஐடி ரத்தம் ஊறிய ஊழியர் இவர்? என்று அவரை பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்த நிலையில் பலரும் இதற்கு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *