Connect with us

india

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

Published

on

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கர்வா சவுத் என்கின்ற பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மனைவிகள் தங்களது கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை. இந்து பெண்கள் கணவனுக்காக விரதம் இருப்பார்கள். இதன் மூலம் தங்களது கணவர்களின் ஆயுள் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பின் இந்த விரதத்தை முடித்த கையுடன் தனது கணவருக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கௌசாம்பி மாவட்டம் இஸ்மாயில்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரின் மனைவி சவிதா. நேற்று தனது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டு இருக்கின்றார். மனைவியின் இந்த பிரார்த்தனைக்கு கணவர் ஷைலேஷ் குமாரும் உதவி செய்து இருக்கின்றார். மாலையில் இந்த விரதத்தை முடித்த பிறகு இருவரும் இணைந்து சாப்பிட இருக்கிறார்கள்.

இதில் கணவருக்கு தெரியாமலே மனைவி விஷம் கொடுத்திருக்கின்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டுக்கு சென்று வருகின்றேன் என்று கூறிவிட்டு சவிதா தப்பி சென்று இருக்கின்றார். அந்த உணவை சாப்பிட்ட கணவர் சைலேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பிறகு அவரது சகோதரர் அக்கினேஷ் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சவிதா வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அதில் எனது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அதன் காரணமாகத்தான் அவரை விஷம் வைத்துக் கொண்டேன் என்று கூறுகின்றார். இதையடுத்து சவிதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *