life style
தாய்ப்பால் அதிகமாக சுரக்க… மறக்காமல் முருங்கைக் கீரை சாப்பிடுங்க…!
![Murungai Keerai - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Murungai-Keerai.jpg)
கீரையில் பல வகைகள் உண்டு. எல்லாமே உடல் ஆரோக்கியத்திற்கானது தான். இன்று நாம் காண இருப்பது முருங்கைக் கீரை.
முருங்கைக் கீரையில் ஏகப்பட்ட சத்துகள் காணப்படுகின்றன. வைட்டமின், புரதம், கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.
இவை அனைத்துமே நமக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் என்பதை மறந்து விடக்கூடாது. இவை சரியான அளவில் உடலில் இருந்தால் தான் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக வேலை செய்யும்.
இதை சாப்பிட்டால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்பார்கள். இதைப் படிக்கும் போது இதற்கு நீங்கள் டக் என்று பதில் சொல்ல முடியும்.
சொரி, பித்தப்பை, கண் நோய்கள், ஜீரண குறைபாடு, ஜலதோஷம் என பல்வேறு வகையான வியாதிகளைக் குணமாக்குகிறது.
வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்தக் கீரையை அரைத்தும் சாப்பிடலாம். பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பெற்றவர்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
latest news
விடுங்கடா என்னை… எனக்கு ரெஸ்ட் வேணும்.. உங்க உடம்பே காட்டும் 8 எச்சரிக்கைகள்…
![health - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/health.jpg)
இப்போது இருக்கும் சமுதாயத்தின் நிலை எப்போதுமே வேலை, வேலை என்ற நிலைக்கு வந்து இருக்கிறது. ஓவர் உழைப்பு, மன அழுத்தம் முதலியவற்றால் உடல் தனக்கு தேவைப்படும் பிரேக் குறித்து நமக்கு சமிஞ்சை கொடுத்தாலும் அதனை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி உடல் பிரேக் கேட்கும் 8 அறிகுறிகள் என்ன தெரியுமா?
வழக்கத்திற்கு அப்பாற்பட்ட சோர்வு:
தொடர்ச்சியான சோர்வு தான் உடலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையை சொல்லும் முதல் அறிகுறி. நல்ல தூக்கத்துக்கு பின்னரும் இந்த சோர்வு குறையாமலே இருக்கும். அந்த சோர்வு ஒருநாளின் மொத்த எனர்ஜியையும் கெடுத்துவிடும்.
கவனகுறைவுகள்:
மூளை எதோ தடைப்பட்டது போல இருக்கா? செய்ய வேண்டிய வேலைகள் எளிதாக இருந்தாலும் செய்ய முடியாமல் போராடுகிறீர்களா? கவனக்குறைவு பிரச்னை இருந்தால் அது கண்டிப்பாக எச்சரிக்கை தான்.
தலைவலி பிரச்னை:
அடிக்கடி தலைவலி ஏற்படுவது மன அழுத்தம் மற்றும் சோர்வின் உடல் வெளிப்பாடு. இந்த தலைவலி என்பது டென்சன் தலைவலி. தலையை சுற்றி வலி எடுக்கும். ஓவரான வலி மற்றும் சத்தம் மற்றும் வெளிச்சத்துக்கு கடுப்பாவது உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.
எமோஷனல் ரோலர் கோஸ்டர்:
உங்கள் லிமிட்டை தாண்டி வேலை செய்வது உங்கள் மனநலனை பாதிக்கும். கோவம், மனம் அலைபாய்வது, வாழ்க்கையின் மூளையில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
மனது சொல்வதை கேளுங்கள்:
மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தினை மட்டும் பாதிக்காமல், செரிமான பிரச்னையையும் ஏற்படுத்தும். வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் வந்தாலும் அதை நீங்க உடனடியாக கவனிக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் உடல்பிரச்னைகள்:
சோர்வு மற்றும் மன அழுத்தம் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் அடிக்கடி உருவாக்கும். இதனால் உடல் அடிக்கடி சரியில்லாமல் போனாலும் உடனே சூதானமாக இருக்க வேண்டும்.
தூக்கமில்லாத இரவுகள்:
தூக்கத்துக்கு போராட்டமாக இருக்கிறதா? இரவு தூக்கத்தில் அடிக்கடி முழிக்கிறீர்களா? அல்லது முழு தூக்கத்தினை அனுபவித்தாலும் உடல் சோர்வாகவே இருக்கிறதா? தூக்கமின்மை மற்றும் பாதிக்கப்பட்ட தூக்க நேரம் உங்கள் உடல் போராடுகிறது என்பதற்கு அர்த்தம்.
நிலையான கவலை மற்றும் வாழ்க்கையே வெறுத்த உணர்வு:
நிலையான பதட்டம் அல்லது முழுமையான பீதி தாக்குதல்களாக கூட மன அழுத்தம் ஏற்படும். சிறிய விஷயங்களைப் பற்றி கூட நீங்கள் தொடர்ந்து கவலைப்படுவதையோ அல்லது விளிம்பில் இருப்பதாக கூட உங்களுக்கு தோன்றும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கலாம்.
ஓய்வுக்காக உடலின் அழைப்பு:
உடல் ஓய்வுக்கு தொடர்ந்து அறிகுறிகளை எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். அப்படி கொடுக்கும் போது புறக்கணிப்பது வெறுப்பு, உணர்ச்சிகள், உடல் மற்றும் மன சோர்வு நிலைக்கு வழிவகுக்கும்.
life style
உங்க செல்ல நாயை டிரெய்ன்ல கொண்டுபோக முடியுமா.. ரயில்வே என்ன சொல்கிறது?
![railway - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/railway.jpg)
வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன.
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில் கொண்டு செல்ல முடியும். இதற்காக நீங்கள் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். நாய்கள், பூனைகள் மட்டுமல்ல ஏன் உங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகலாக இருக்கும் குதிரைகள், யானைகளைக் கூட ரயிலில் கொண்டுசெல்லலாம் என்கிறார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.
* அளவில் பெரிய பிராணிகளாக இருந்தால் அவற்றை லக்கேஜ் வேனில் கொண்டு செல்லலாம்.
* பயணிகள், வளர்ப்புப் பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் தங்களோடு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இரண்டாம் வகுப்பு – மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
* உங்கள் டிக்கெட்டோடு அந்த வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேகக் கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டும்.
* லக்கேஜ் பெட்டிகளில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னர் ரயில்வேயின் பார்சல் அலுவலகத்தில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர வேண்டும்.
* அந்த பிராணிகளுக்கு எந்தவொரு தொற்று நோயும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். இந்த சான்று பயணிக்கும் நாளுக்கு முந்தைய 24 முதல் 48 மணி நேரத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்.
* அதேபோல், வளர்ப்புப் பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் மருத்துவ ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
* சின்ன கூண்டுகளில் அடைத்து வளர்ப்புப் பிராணிகளை எந்தவொரு கோச்சிலும் கொண்டுசெல்லலாம். ஆனால், அதற்குரிய மருத்துவ ஆவணங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அவற்றுக்கு லக்கேஜ் கட்டணம் பிரத்யேகமாக செலுத்த வேண்டும்.
* இதுகுறித்த கூடுதல் விவரங்களை ரயில்வே துறையின் கமர்ஷியல் டிபார்ட்மெண்டை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…
latest news
30000க்குள் சிறந்த பேட்டரி தன்மையை கொண்ட மொபைல் போன்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..
![mobile phones under 30000 - Cinereporters Info mobile phones under 30000](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/mobile-phones-under-30000.jpg)
2023ஆம் ஆண்டில் மீடியம் விலை போன்கள் பல வந்துள்ளன. 30000க்கும் கீழ் சாம்சங், போகோ, iQOO, ஒன்ப்ளஸ் என பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் உள்ளன. இவை அனைத்தும் பலவகை வசதிகளை கொண்டிருத்தாலும் சிறந்த பேட்டரித்தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறான போன்கள் எவை என பார்க்கலாம்.
Samsung Galaxy F54:
![samsung galaxy f54 - Cinereporters Info samsung galaxy f54](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/samsung-galaxy-f54.jpg)
samsung galaxy f54
இந்த மொபைலானது 6000mAh பேட்டரி தன்மையை கொண்டுள்ளது. 2023ல் வந்த மொபைல் வகைகளில் இது ஒரு சிறந்த மொபைல். மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு நீடித்து உழைக்கக்கூடியதாகும். இது 108 mp கேமராவையும், 120Hz AMOLED திரையையும் கொண்டுள்ளது. மேலும் இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.
iQOO Neo 7:
![iQOO Neo 7 - Cinereporters Info iQOO Neo 7](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/iQOO-Neo-7.jpg)
iQOO Neo 7
இதன் பேட்டரி 5000mAh மற்றும் இது 120w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை நாம் சார்ஜ் செய்யும் பொழுது 10 நிமிடங்களுக்குள் 50% சார்ஜ் ஆகி விடுமாம். அதிக மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ். இதன் விலை ரூ.27,999 ஆகும்.
POCO F5:
![poco f5 - Cinereporters Info poco f5](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/poco-f5.jpg)
poco f5
5000mAh பேட்டரி அமைப்பினை கொண்ட இந்த மொபைலானது 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்டது. மேலும் இதில் Snapdragon 7+Gen 2 ப்ராஸசரும் இருப்பதால் இதன் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்வதனால் நாம் ஒரு நாள் முழுவதும் மொபைலை உபயோகப்படுத்தலாம். இதன் விலை ரூ.29,999 ஆகும்.
OnePlus Nord 2T:
![oneplus nord 2t - Cinereporters Info oneplus nord 2t](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/oneplus-nord-2t.jpg)
oneplus nord 2t
80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்ட இதன் பேட்டரி 4500mAh தன்மையை கொண்டது. மேலும் இது 6.43 இன்ச் திரையினையும் 50mp கேமராவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.28,999 ஆகும்.
Realme 11 Pro+:
![realme11 pro+ - Cinereporters Info realme11 pro+](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/realme11-pro.jpg)
realme11 pro+
இந்த மொபைலானது 5000mAh பேட்டரி தன்மையையும் 100w ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையையும் கொண்டுள்ளது. மேலும் இது 12ஜிபி RAM, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இது 200mp பின்புற கேமராவை கொண்டுள்ளதால் இதன் கேமரா மிக துல்லியமாக படங்களை எடுக்கும். இதன் விலை ரூ.27,999 ஆகும்.
govt update news
என்ன இந்த நாடுகளுக்கெல்லாம் செல்ல விசா தேவையில்லையா!..அது எந்தெந்த நாடுகள்னு தெரிஞ்சிகனுமா?..
![visafree countries - Cinereporters Info visafree countries](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/visafree-countries.jpg)
விசா என்பது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஆவணம் ஆகும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல் கூட நாம் பெரும்பாலான நாடுகளுக்கு செல்லலாம். ஒரு வேளை நாம் சில வேடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பினால் நாம் இந்த வகை நாடுகளுக்கு செல்ல திட்டமிடலாம். ஆனால் இந்த வகை நாடுகளில் நாம் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் இருக்குமா என்பதை கூற முடியாது. அது என்னென்ன நாடுகள் எனப் பார்க்கலாம்.
பூட்டான்:
![bhuttan - Cinereporters Info bhuttan](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/bhuttan.jpg)
bhuttan
பூட்டான் என்பது மலைகள் மற்றும் சமவெளிகளை கொண்ட மிக அழகான நாடாகும். மேலும் இதன் இயற்கையின் அழகு தனித்துவம் வாய்ந்தது. இந்த நாட்டை இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரும் விரும்புவர். இந்தியர்களை சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் விசா இல்லாமல் இங்கு அனுமதிப்பர். அதற்கு நாம் நமது அடையாள சான்றை அளிப்பது முக்கியம்.
ஃபிஜி:
![fiji1 - Cinereporters Info fiji](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/fiji1.jpg)
fiji
மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தேன்நிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற இடம் ஃபிஜி ஆகும். இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால் இங்கு பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலாவிற்கு வருவார்கள்.
பார்படாஸ்:
![barbadas - Cinereporters Info barbadous](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/bourbadas.jpg)
barbadous
இது ஒரு மிக சிறந்த கரீபியன் நாடு. இந்த நாட்டிற்கு பொதுவாக கோடைகால விடுமுறைக்கு மக்கள் செல்வர். எனவே சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இந்த இடம் சிறந்த இடமாக கருதப்படுகிறது.
ட்ரினிடடு(Trinidad) மற்றும் டொபகோ(Tobago):
![trinidad - Cinereporters Info trinidad](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/trinidad.jpg)
trinidad
இந்த நாடுகளில் பொழுது போக்கு மட்டுமல்லாமல் அங்கு செல்பவர்களுக்கு மன அமைதியை தரக்கூடிய ஒரு இடமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் இது நமது இந்தியாவில் உள்ள கோவாவை போன்று இருக்குமாம்.
நேபால்:
![nepal1 - Cinereporters Info nepal](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/nepal1.jpg)
nepal
நேபால் என்பது பலரின் கனவு இடமாகவே இன்றளவும் உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் செலவு என்பது மிகவும் குறைவே. எனவே இங்கு நாம் விசா என அழைக்கப்படும் தகுதி சீட்டு இல்லாமல் பயனிக்கலாம்.
மொரிஷியஸ்:
![mauritius - Cinereporters Info mauritius](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/mauritius.jpg)
mauritius
மொரிஷியஸ் நாடும் பெரும்பாலும் ஜோடிகள் அதிகமாக விரும்பும் ஒரு இடமாகும். மேலும் இதன் கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கும். எனவே நமது பயணங்களை இனிமையானதாக்க இப்படியான இடங்களுக்கு சென்று நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிடலாம்.
latest news
ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து விட்டீர்களா?..இந்த முறைகளை ஃபாலோவ் பண்ணுங்க..
![aadhaar voter id linkage - Cinereporters Info aadhaar voter id linkage](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/aadhaar-voter-id-linkage.jpg)
சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டினை இணைக்கும் படியான அறிவிப்பினை வெளியிட்டது. இவ்வாறு இணைப்பதால் ஒரு நபரே ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுக்க முடியும். எனவே தேர்தல் ஆணையமானது இந்த திட்டத்தை கட்டாய திட்டமாக்கியது. இவ்வாறு இணைப்பதற்கு நாம் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இதனை நாம் நமது மொபைல் போன் மூலமாகவே மிக எளிமையாக பண்ணலாம். இவ்வாறு ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் எவ்வாறு இணைப்பது என்று தெரியவில்லையா?.இதோ கீழே உள்ள படி நிலைகளை பின்பற்றவும்.
- ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் முதலில் ‘Voter Helpline App‘ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- செயலியினுள் நுழைந்தபின் ‘I Agree‘ என்ற பட்டனை அழுத்தி ‘Next‘ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- Voter Registration என்ற பட்டனை அழுத்தியபின் ‘Electoral Authentication Form‘ ஐ செலக்ட் செய்யவும்.
- ‘let’s Start‘ என்ற பட்டனை அழுத்தியபின் நமது ஆதார் கார்டுடன் இணைந்திருக்கும் மொபைல் எண்ணை கொடுக்கவும். பின் OTP யானது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்து சேரும்.
- OTP யை கொடுத்தபின் ‘Yes I have voter ID’ என்ற பட்டனை அழுத்தவும்.
- நமது வாக்களர் அட்டையின் (EPIC) எண்ணை கொடுத்தபின் நமது மாநிலத்தை தேர்வு செய்யவும். பின் ‘Fetch Details‘ என்ற பட்டனை அழுத்தவும்.
- ‘Proceed’ என்ற பட்டனை அழுத்தியபின் நமது தகவல்களை சரி செய்து பின் ‘Next’ என்ற பட்டனை அழுத்தவும்.
- பின் அதனுள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து ‘Done’ என்ற பட்டனை அழுத்தவும்.
- பின் Form 6B யில் நமது தகவல்களை சரிபார்த்து ‘Confirm‘ என்ற பட்டனை அழுத்தவும்.
இவ்வாறான செயல்முறைகளின் மூலம் நாம் நமது ஆதார் கார்டினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். மேலும் http://www.nvsp.in என்ற முகவரிக்கு சென்று நமது ஆதார் கார்டு- வாக்காளர் அடையாள அட்டை இணைந்துவிட்டதா எனவும் அறியலாம்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news2 days ago
வேற லெவல் லுக், சூப்பர் ஸ்பெக்ஸ் கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news20 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news19 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!