தாய்ப்பால் அதிகமாக சுரக்க… மறக்காமல் முருங்கைக் கீரை சாப்பிடுங்க…!

கீரையில் பல வகைகள் உண்டு. எல்லாமே உடல் ஆரோக்கியத்திற்கானது தான். இன்று நாம் காண இருப்பது முருங்கைக் கீரை.

முருங்கைக் கீரையில் ஏகப்பட்ட சத்துகள் காணப்படுகின்றன. வைட்டமின், புரதம், கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.

இவை அனைத்துமே நமக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் என்பதை மறந்து விடக்கூடாது. இவை சரியான அளவில் உடலில் இருந்தால் தான் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக வேலை செய்யும்.

இதை சாப்பிட்டால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்பார்கள். இதைப் படிக்கும் போது இதற்கு நீங்கள் டக் என்று பதில் சொல்ல முடியும்.

சொரி, பித்தப்பை, கண் நோய்கள், ஜீரண குறைபாடு, ஜலதோஷம் என பல்வேறு வகையான வியாதிகளைக் குணமாக்குகிறது.

வைட்டமின் ஏ அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்தக் கீரையை அரைத்தும் சாப்பிடலாம். பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பெற்றவர்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

 

Leave a Comment