Connect with us

latest news

ஆப்பிள், ஆப்பிள் விஷன் ப்ரோ கண்களாலேயே கட்டுப்பத்தலாம்.. ஆப்பிள் விஷன் ப்ரோ-வில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..?

Published

on

apple pro vision

2007 ஆம் ஆண்டு ஐபோன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய அறிமுகம் சமீபத்திய WWDC 2023 நிகழ்வில் அரங்கேறியது. ஆப்பிள் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய சாதனம், அறிமுகமான நொடி முதல் தற்போது வரை உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு லீக் மற்றும் ரெண்டர்களின் மூலம் அறியப்பட்டு வந்த ஆப்பிள் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். ஹெட்செட் இந்த ஆண்டு WWDC நிகழ்வில் உண்மையாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த தலைமுறை சாதனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ என்று பெயரிட்டுள்ளது. புதிய சாதனம் பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

apple vision  pro

apple vision pro

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ சாதனத்தை ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று அழைக்கிறது. முற்றிலும் புதிய ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் சாதனம்- டிஜிட்டல் தரவுகளை நிஜ உலகில், மிக நேர்த்தியாக இணைத்து, எவ்வித சிரமமும் இன்றி பயனர்கள் நிஜ உலகில் மற்றவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க செய்கிறது. இந்த ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மீது விர்ச்சுவல் உலகை மிக நேர்த்தியாக உருவாக்குகிறது.

அளவில் மிக மெல்லியதாக காட்சியளிக்கும் விஷன் ப்ரோ தோற்றத்தில் ஸ்கை காகில்ஸ் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புற பேனல் டிண்ட் செய்யப்பட்டு, இதனை அணிபவருக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது. இந்த ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் மற்றும் டயல் வழங்கப்படுகிறது.

apple vision  pro

apple vision pro

ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்போரும், விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ பயன்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் ஜெய்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. விஷன் ப்ரோ மாலில் இரண்டு மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இரு டிஸ்ப்ளேக்களும் 4K ரெசல்யூஷனில், ஸ்டாம்ப் அளவிலேயே உள்ளன. அகலமான தோற்றத்தை அனுபவிக்க செய்யும் நோக்கில், டிஸ்ப்ளேக்களை நீட்டிக்க மூன்று லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் மொத்தமாக 12 கேமராக்கள், 5 சென்சார்கள் மற்றும் 6 மைக்ரோபோன்கள் உள்ளன. இதில் உள்ள கேமராக்கள் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்குகின்றன. இரண்டு ஐ.ஆர். கேமராக்கள், எல்இடி லைட்கள் கண்களை டிராக் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல் M2 சிப் மற்றும் புதிய R1 சிப் மூலம் இயங்குகிறது. இவை தரவுகளை அதிவேகமாக இயக்கி, ஹெட்செட் சீராக இயங்குவதை உறுதி செய்கின்றன.

apple vision  pro

apple vision pro

இந்த ஹெட்செட் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த இண்டர்ஃபேஸ் முப்பரிமாண தோற்றத்தை வழங்குகிறது. இது ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளின் சப்போர்ட் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஹெட்செட் ஆப்பிள் ஆப்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. விஷன் ப்ரோ மாடலின் அம்சங்களை கண்களாலேயே கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்செட்-இன் மேல்புறம் டிஜிட்டல் கிரவுன் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.

முழு சார்ஜ் செய்தால் இந்த ஹெட்செட் இரண்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. பிளக்-இன் செய்த நிலையில், நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மற்ற ஹெட்செட்களை போன்று இல்லாமல், இதனை பயன்படுத்துவோரின் கண்களை மற்றவர்களும் பார்க்கலாம். விஷன் ப்ரோ ஹெட்செட் மூலம் திரைப்படம் பார்க்கும் போது திரையரங்கில் இருந்து பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபோன்களில் ஃபேஸ் ஐடி அம்சம் போன்றே இதில் ஆப்டிக் ஐடி அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது பயனரின் கண்களை ஸ்கேன் செய்து ஹெட்செட்-ஐ அன்லாக் செய்கிறது. ஆப்டிக் ஐடி விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

Published

on

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.

அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்

google news
Continue Reading

india

சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!

Published

on

அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

google news
Continue Reading

india

மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!

Published

on

ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.

விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது.  இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது.  அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

google news
Continue Reading

Trending