Connect with us

govt update news

என்ன!மீண்டும் 1000ரூபாய் நோட்டு திரும்ப வரபோகுதா?..ரிசர்வ் வங்கியின் முக்கியமான அறிவிப்பு..

Published

on

rbi governor1

மனிதருக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஒவ்வொரு மனிதரின் வாழ்வியல் ஆதாரத்திற்கு பணம் முக்கியம். இந்தியாவில் அவ்வப்போது பணமதிப்பிழப்பினை இந்திய அரசு அறிவித்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு இந்திய அரசானது ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பின் தற்போது ரூ. 2000த்தையும் செல்லாது எனவும் அறிவித்துள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் முதலீடாகவோ அல்லது வங்கிகளில் மாற்றி கொள்ளவோ வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

2000 rupees demonitisation

2000 rupees demonitisation

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்தபின் ரூ. 1000 நோட்டுகளை விடப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சிலர் மத்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்ததால் அதற்கு பதிலாக 1000 ரூபாய் நோட்டுகளை சந்தையில் விடப்போவதாக கூறுகின்றனர். இதனை பற்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்தா தாஸ் மிக மிக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

no chance of issue 1000 rupee note

no chance of issue 1000 rupee note

அதன்படி தற்சமயம் 1000 ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதாக எந்த வித எண்ணமும் இல்லை எனவும் இது வெறும் வதந்தி எனவும் கூறியுள்ளார். மேலும் சந்தையில் 500 ரூபாய்க்கு அதிகமாகவும் 2000 ரூபாய்க்கும் குறைவாகவும் பணமானது இப்போதைக்கு தேவைப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

500 rupee note

500 rupee note

ஒருவேளை தேவைப்பட்டால் வரும்காலங்களில் 1000 ரூபாயை புழக்கத்தில் விடலாம் எனவும் மற்றப்படி இப்போதைக்கு அந்த யோசனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு நமது இந்தியாவில் மிக அதிக மதிப்பு கொண்ட பணம் ரூ. 500 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

govt update news

சைலண்டாக ஸ்பீடெடுக்கும் சண்டிபுரா வைரஸ்?…மருந்துகள் இல்லாததால் நிலவும் அச்சம்…

Published

on

Chandipura Virus

கொரனா இந்த பெயரை வாழ் நாளின் இறுதி வரை மறக்கமாட்டார்கள் இருபத்தி ஓறாம் நூற்றாண்டு மக்கள். சீனாவிலிருந்து வந்து தனது தாக்குதலை உலகம் முழுவதும் நடத்தியது இந்த கொடிய வகை வைரஸ். ஆயிரக்கணக்கான உயிர்பலி செய்திகள் தினசரி உலுக்கி வந்தது உலகத்தையே.

பரவலின் வேகமும், நோயின் தாக்கமும் அதிகமாக இருந்த நேரத்தில் மருந்துகள் ஏதுமில்லாததால் காவு வாங்கி ருத்ரதாண்டவத்தை ஆடி வந்தது கொரனா. ஒரு வழியாக தனது கோர தாண்டவத்தை குறைத்து செயலிழக்கத்துவங்கியது இந்த வைரஸ். அதன் பிறகே இந்த உலகம் நிம்மதிப் பெருமூச்சை விடத்துவங்கியது.

அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்து வந்த வகை வகையான வைரஸ் காய்ச்சல்களை எல்லாம் மருத்துவ வளர்ச்சிகள் வீழ்ச்சியடையச்செய்தது. இப்போது புதிய வகை வைரஸ் வட மாநிலங்களில் தனது பரவலை துவங்கியிருக்கிறது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் தனது பரவலை ஆரம்பித்தது சண்டிபுரா வைரஸ். பெரும் அளவில் குழந்தைகளையே அதிக பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இந்த வைரஸிற்கு இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர். மணல் ஈக்கள், உன்னி, கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Hospita

Hospital

இந்த தொற்று பாதித்தவர்களுக்கு காய்ச்சல், தகை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, வலிப்பு அறிகுறிகளாக இருந்து வருகிறது. அதீத காய்ச்சலால் எழுபத்தி இரண்டு மணி நேரத்தில் மரணம் வரை கொண்டு செல்லும் இந்த வகை வைரஸிற்கு இதுவரை எந்த தடுப்பு மருந்துகளோ, ஊசிகளோ கிடையாது.

இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை நோய் தடுப்பு வழி முறைகளை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் கால்களில் காலணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது வீடுகளைச் சுற்றி பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கவும், பூச்சிக்கடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமான ஆடைகளை அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

google news
Continue Reading

govt update news

குட் நியூஸ்..! ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

Published

on

அம்மா உணவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதில் காலை மதியம் என இரண்டு வேளையும் குறைந்த செலவில் மக்கள் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. காலையில் சாம்பாருடன் இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

மதியம் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. இது தவிர வாரத்திற்கு ஒரு நாள் வரைட்டி சாதமாக புளி சாதம், தக்காளி சாதம் போன்றவை ஐந்து ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவகம் கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் அம்மா உணவகம் மூடப்படும் என்று தகவல் வெளியானது.

ஆனால் அம்மா உணவகம் தற்போது வரை இயங்கி வருகின்றன. சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பாக பணிபுரியும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலி வழங்கப்படுகின்றது. இவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த இருப்பதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “சென்னையில் உள்ள அம்மா உணவ ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி உள்ளோம். இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 3.07 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகின்றது. அதிமுக ஆட்சியில் இருந்த போது ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அம்மா உணவக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

govt update news

வெளியானது க்ரூப்2 அப்ளிகேஷன்… யார் யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் உள்ளிட்ட முக்கிய தகவல்…

Published

on

By

தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குரூப்-2 தேர்வு வாயிலாக உதவி லேபர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட  507 காலியிடங்களும், குரூப்-2-ஏ தேர்வு வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கான வயது வரம்பு, பட்டப்படிப்பு தகுதிகள் அடங்கிய  விளம்பரம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன்20) தொடங்கி ஜூலை 19ந் தேதியுடன் முடிவடைகிறது.

முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடக்க இருக்கிறது. பொது அறிவில் 100 கேள்விகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்னரை மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலி பணியிடத்துக்கு 10 பேர் விதம் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வு க்ரூப்2 மற்றும் க்ரூப் 2ஏ என தனி தனியாக நடத்தப்படும். இதுகுறித்து மேலும் தகவலை அறிய www.tnpsc.gov.in இணையத்தில் தெளிவான விளம்பரம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

google news
Continue Reading

govt update news

அட இது புதுசா இருக்கே..அப்போ இனி வங்கிக்கே போக வேணாமா?..கலக்குறீங்களே PNB..

Published

on

PNB

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் நமக்கு பல செளகரியங்கள் கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை அனைத்து நிறுவனங்களில் தற்போது உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் Meteverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.

metaverse facility

metaverse facility

இந்த வசதியில் நாம் நமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும் இதன் மூலம் நாம் மற்றவர்களுடனும் தொடர்பினை வைத்து கொள்ளலாம். நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகத்தினை கற்பனை உலகமாக மாற்றுவதற்கு Augmented Reality  மற்றும் அந்த கற்பனை உலகத்தில் நாம் உணர்ச்சிபூர்வமாக வாழ்வதற்கு Virtual reality என இவ்விரண்டையும் சேர்த்ததுதான் Metaverse  என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.

இந்த வசதியினை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Virtual Bank வசதியின் மூலம் நமக்கு பல வசதிகளும் கிடைக்கின்றன. இது இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த வசதியின் மூலம் வங்கிகளின் வசதியான பணத்தினை டெபாசிட் செய்வது, லோன் வசதிகள், Retail/MSME வாசதிகள், டிஜிட்டல் திட்டங்கள், அரசின் திட்டங்கள்  போன்ற வசதிகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு Virtual Reality மூலம் பெற்று கொள்ளலாம்.

PNB virtual reality feature

PNB virtual reality feature

இந்த வசதியினை அதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதாவது அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தும் நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த வங்கியானது 3டி வசதியுடன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.

google news
Continue Reading

govt update news

ஒரு வழியா வந்துருச்சுப்பா..பெண்களுக்கான ரூ.1000 உதவி தொகையை எவ்வாறு பெறுவதுனு தெரியனுமா?..

Published

on

kalagnar magalir urimai thokai scheme

தமிழக முதலைமச்சர் தனது தேர்தல் வாக்குமூலத்தில் மாதமாதம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜுலை 10ஆம் தேதி வெளியிட்டார். இதன்படி கீழ்காணும் தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த உதவிதொகையை பெறலாம் எனவும் அறிவித்தார்.

application form

application form sample

தகுதியானவர்கள்:

  • இந்த உதவி தொகையை பெற விரும்புவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • வருடத்திற்கு நாம் உபயோகிக்கும் மின்சாரம் 3600 யூனிட்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.
  • குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க பணிகளிலோ அல்லது பென்ஷன் வாங்குபவராகவோ அல்லது அரசியல் பிரமுகராகவோ இருத்தல் கூடாது.
  • மேலும் குடும்ப தலைவர் பெயரில் நான்கு சக்கர வாகனம் பதிவு செய்திருக்க கூடாது.
  • குடும்ப தலைவர் 5 ஏக்கருக்கு மேல் விளை நிலமும் 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலமும் இருத்தல் கூடாது.

குடும்ப தலைவிகளுக்கான வரையறைகள்:

  • இந்த உதவி தொகையை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை குடும்ப தலைவரின் பெயரில் குடும்ப அட்டை இருந்தாலும் பிரச்சனை இல்லை. அந்த அட்டையில் உள்ள குடும்ப தலைவி இந்த தொகையினை பெற்று கொள்ளலாம்.
  • குடும்ப தலைவி இல்லாத நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள 21 வயதினை கடந்த பெண்ணிற்கு இந்த உதவி தொகை வழங்கப்படும். இந்த வசதி திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.

முதலமைச்சர் அறிவிப்பின்படி இந்த திட்டமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 நாள் முன்னாள் முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் அன்று நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டதின் கீழ் கிட்டதட்ட 1.5 லட்சம் பயனர்கள் விண்ணப்பிப்பார்கள் எனவும் தெரிகின்றது. இதற்கான சிறப்பு முகாம்களை ஆங்காங்கே உள்ள நியாய விலை கடைகளில் நடத்துமாறு மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரேஷன் அட்டை இல்லாத எழைகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் போன்றவர்கள் இத்திட்டத்தி சேர அவர்களின் ஆதார் கார்டுகளை வைத்திருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பத்தினை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1aYZS89jJ4E-tWxMEKrFEPPLVfAncD3Kp/view?pli=1

google news
Continue Reading

Trending