Cricket
எப்பவும் இதை தான் சாப்பிடுவேன்!.. இதை மட்டும் தான் வாங்கவும் முடிந்தது..ஹர்திக் பான்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரமாக ஹர்திக் பான்டியா விளங்கி வருகிறார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் ஆல்-ரவுன்டர்கள் அதிகம் பேர் இல்லை. மேலும் எந்த சூழலிலும் ஆட்டத்தின் போக்கை, அதிரடி பேட்டிங்கால் மாற்றும் வல்லமை பலருக்கு இல்லை. அந்த வகையில், இரு செயல்பாடுகளிலும் ஹர்திக் பான்டியா போட்டியில் வெற்றி பெற செய்வதில் சிறந்து விளங்குகிறார்.
2015 ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பான்டியாவை ரூ. 10 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கே ஏலத்தில் எடுத்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என்று தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வந்த ஹர்திக் பான்டியா இந்திய அணியில் இடம்பிடித்து, தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.
2022 ஐ.பி.எல். தொடருக்கு முன் ஹர்திக் பான்டியாவை குஜராத் டைட்டனஸ் அணி ரூ. 15 கோடி கொடுத்து அணியில் சேர்த்துக் கொண்டது. தற்போதைய இந்திய வீரர்களில் பணக்கார வீரராக 29 வயது ஹர்திக் பான்டியா உள்ளார். எனினும், இவரது ஆரம்பகட்ட வாழ்க்கை இவ்வளவு செல்வம் மிக்கதாக இல்லை.
இதன் காரணமாக பல சமயங்களில் மேகி மட்டும் சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்ததாக ஹர்திக் பான்டியா தெரிவித்து இருக்கிறார். தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக தந்தை இருந்ததாகவும், அவருக்கு மிக குறுகிய காலக்கட்டத்தில் அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக குடும்பத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ளது. இது குறித்து தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது..,
“எனது டயட் வெறும் மேகி மட்டுமாகவே இருந்தது. எனக்கு மேகி அதிகம் பிடித்திருந்தது, மேலும் அந்த சூழலும் அதற்கு மட்டும் தான் உகந்ததாக இருந்தது. இதன் காரணமாக மேகியை மட்டுமே இரவும், பகலும் உண்டு வந்தேன். வீட்டில் என் தந்தை மட்டுமே வருமானம் ஈட்டி வந்தார். ஒரே இரவில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது.”
“பிறகு, ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது, நல்ல வேளையாக நாங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனை சென்றோம். அப்போது தான் குடும்பத்தில் நிதி சிக்கல்கள் ஏற்பட துவங்கியது. எங்களிடம் சேமிப்பு என்று எதுவும் இல்லை, நாங்கள் ஈட்டியதை விட அதிகளவில் செலவிட்டு வந்தோம்,” என்று தெரிவித்தார்.
Cricket
ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.
“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.
Cricket
மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.
துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.
Cricket
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.
கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.
களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.
Cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000-க்கும் அதிக ரன்கள் மற்றும் 200-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், இதே சாதனையை மற்றொரு வீரர் சமன் செய்யும் நிலையில் உள்ளார்.
இந்த வீரரும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருபவர் தான். இந்திய அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜடேஜாவின் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 1943 ரன்களையும், 369 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா தற்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களை அடித்துள்ள நிலையில், அவர் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைக்க முடியும்.
Cricket
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.
முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.
இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
-
Cricket1 day ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket1 day ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket1 day ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
latest news1 day ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Cricket3 hours ago
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
-
Cricket1 day ago
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
-
Cricket2 hours ago
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
-
Cricket1 day ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…