Connect with us

india

நீக்கப்பட்ட கருணை மதிப்பெண்கள்… மீண்டும் நீட் தேர்வு… தொடர் குளறுபடிகளால் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!..

Published

on

நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நீட் மதிப்பெண்களை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்பு எல்லாருக்கும் கிடைக்கவும், எந்த வித அரசியல் தலையீடும் இருக்க கூடாது எனக் கூறப்பட்டு 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் இருந்தும் அதில் தமிழ் மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி திமுக, அதிமுக கட்சிகள் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால்  இந்த வருடம் இந்தியாவே இந்த தேர்வு முடிவுகள் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். கடந்த வருடங்களில் முழுமதிப்பெண் எடுப்பதே கடினம். அதிலும் எடுத்தாலும் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே எடுத்த நிலையில் இந்த வருடம் 67 பேர் மதிப்பெண் எடுத்திருந்தனர். மேலும், ஹரியானாவின் ஒரு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முழுமதிப்பெண் எடுத்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது, வினாத்தாள் கசிந்ததாக புகார் இருக்கும் ராஜஸ்தானில் 11 பேர் முழுமதிப்பெண் எடுத்திருந்தனர். மேலும் நெகட்டிவ் மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்று இருப்பது சாத்தியமானது இல்லை. ஏனெனில், தவறான மதிப்பெண் என்றால் கேள்விக்கான மதிப்பெண் 4 மற்றும் 1 மைனஸ் மதிப்பெண் என ஐந்து மதிப்பெண் கழியும். இதனால் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், தேர்வறையில் நேரம் குறைபாடு ஏற்பட்டதாக 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் நீட் ரிசல்டை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில், தேர்வு முகமை கூறிய கருணை மதிப்பெண்கள் பதிலை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதை தொடர்ந்து, 1563 மாணவர்களின் கருணை மதிப்பெண்ணை நீக்கி மீண்டும் அவர்களுக்கு நீட் தேர்வு வைக்க அறிவுறுத்தி இருக்கிறது. இதில் தேர்வு எழுத விரும்பாத மாணவர்களின் கருணை மதிப்பெண் இல்லாத பழைய மதிப்பெண்ணே தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 23ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு 30ந் தேதி ரிசல்ட்டை வெளியிடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குவைத் கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது எப்படி? 43 இந்தியர்களின் உயிரை காவு வாங்கிய அதிகாலை அகோரம்…

google news

india

மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

Published

on

இந்திய நாடு சுதந்திரம் அடைவதில் முக்கிய பங்கு வகித்தவர் காந்தியடிகள். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக “மகாத்மா” என அழைக்கபடுகிறார். தேசப்பிதா காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையின் மூலமாக இந்திய நாடு பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே அவரது நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு சென்று தலைவர்கள் பலரும் தங்களது மரியாதையை மலர் தூவி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவு மரியாதையை செலுத்தினார்.

டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.

CM Pays Respect to Mahatma Gandhi

CM Pays Respect to Mahatma Gandhi

தமிழக அரசின் சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மகாத்மாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று காந்தியின்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மாவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் ஆளுநருடன் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.

google news
Continue Reading

Cricket

ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…

Published

on

suryakumar yadav

இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.

இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.

Rohit Sharma

Rohit Sharma

இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.

முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.  இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

google news
Continue Reading

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

Cricket

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

Published

on

Indian Team

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் நின்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் தடை ஏதுமின்றி இன்று முழுமையாக நடந்து முடிந்தது.

நூற்றி ஏழு ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர் பங்களாதேஷ் அணியினர்.

Ind Batting

Ind Batting

இருநூற்றி முப்பத்து மூன்று ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் டுவண்டி – டுவண்டி போட்டியில் வளையாடுவதைப் போல அதிரடியாக ஆடினர்.

முப்பத்தி நான்கு புள்ளி நான்கு ஓவர்களில் இரு நூற்றி என்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடி எழுபத்தி இரண்டு ரன்களை குவித்தார். ராகுல் அறுபத்தி எட்டு ரன்களும், விராட் கோலி நாற்பத்தி ஏழு ரன்களும் எடுத்தனர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கதேச அணி இருபத்தி ஆறு ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியை டிராவாக்க வங்கதேச அணி கடுமையான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருபத்தி ஆறு ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நேரத்தில் போட்டியை வென்று வங்கதேச அணியை வாஷ்-அவுட் செய்யும் முனைப்பினை இந்திய அணி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

Cricket

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

Published

on

Ind vs Ban

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.

Ind Bowling

Ind Bowling

நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.  இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.

google news
Continue Reading

Trending