Connect with us

latest news

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்!. உயிரிழப்பு 13ஆக உயர்வு…

Published

on

kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

பலரும் ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம், திருவண்ணாமலையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். கருணாபுரம் பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் ஏ.வ.வேலு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வேகமாக கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அதோடு, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்திருக்கிறது. இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 13 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!

Published

on

By

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் அறிவித்திருக்கிறார்கள்.

விராட் கோலி

தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு ஓய்வை அறிவித்திருக்கிறார் விராட் கோலி. 2010-ம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் கோலி, இதுவரை 6 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கிறார். 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பைய வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், டி20-யைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு இதுதான் முதல் உலகக்கோப்பை.

ஆட்டநாயகன் விருதுக்குப் பின் பேசிய கோலி, `இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். நாங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைதோமோ… அதை சாதித்திருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். விராட் கோலி, 125 சர்வதேச டி20 போட்டிகளில் 4,188 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தியா சார்பில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா

2007-ல் இந்தியா விளையாடிய முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் அறிமுகமான ரோஹித் ஷர்மா, டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ரன் ஸ்கோரர். முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு மொத்தமாக 9 டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்கிற பெருமை கொண்டவர்.

இளம் வீரராக முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகு, தற்போது கேப்டனாக இந்த உலகக்கோப்பை வென்றிருக்கிறார். 159 டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் உள்பட 4,231 ரன்கள் அடித்திருக்கிறார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, `இது என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி கூட…’ என்று விராட் கோலியைத் தொடர்ந்து ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடாத ரோஹித்தும் கோலியும் இந்த உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்தே, கடந்த ஜனவரி முதல்தான் டி20-களில் விளையாடத் தொடங்கினர். இந்தத் தொடருக்கு முன் ரோஹித் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்தான் இந்தியாவின் கேப்டன் என்பதில் கோச் டிராவிட் உறுதியாக இருந்தார். அவரின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி கோப்பையை பரிசளித்திருக்கிறார் ரோஹித்.

google news
Continue Reading

Cricket

13 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை… டி20 சாம்பியனான இந்திய அணி!

Published

on

By

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 சாம்பியனாக முடிசூடியது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, பவர்பிளேவில் ரோஹித், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து கைகோர்த்த விராட் கோலி – அக்சர் படேல் ஜோடி இந்திய அணியின் ரன் வேகத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல், 47 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த ஷிவம் துபே விராட் கோலிக்கு கம்பெனி கொடுக்க அவரும் ஆக்‌ஷன் மோடுக்கு மாறினார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி, இந்த ஒரே போட்டியில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுக்க முடியுமா என்று நினைத்திருந்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது.

முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் டிகாக்கும் ஸ்டப்ஸும் எதிர் தாக்குதல் ஆட்டம் ஆடினர். ஸ்டப்ஸ், டிகாக் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹென்ரிச் கிளாஸன் மிரட்டலான ஆட்டம் ஆடினார். கடைசி 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்கிற நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் வீசிய 14-15வது ஓவர்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா 38 ரன்களை எடுத்தது. குறிப்பாக அக்சரின் 15-வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது.

கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் என்ற நிலையில், கிட்டத்தட்ட மேட்ச் இந்தியாவின் கையைவிட்டு போய்விட்டது என்றே நினைத்தனர். ஆனால், 16-வது ஓவரை வீசிய பும்ரா, கடைசி வரைக்கும் சண்ட செய்வோம்னு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தார். 17-வது ஓவரில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி பாண்டியாவும் மறுமுனையில் பிரஷரை ஏற்றினார்.

அடுத்த ஓவரில் மார்கோ யான்சனை வீழ்த்தியதோடு 2 ரன்களை மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் 20 ரன் தேவை. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தனது பங்குக்கு நெருக்கடியை அதிகரித்ததோடு 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவை. 16-19 இடையிலான 4 ஓவர்களில் இந்தியா 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தது மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. பாண்டியா வீசிய முதல் பந்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் அட்டகாசமான கேட்ச் பிடித்து கில்லர் மில்லரை வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2007-க்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது.

google news
Continue Reading

india

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

Published

on

By

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த மச்சிப்பா தண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையறிந்து மகேஷின் குடும்பத்தினரும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரிடம் அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குப் போன மகேஷ் மனைவியை அடிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரின் மனைவி மகேஷை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார். கை, கால்களை பிணைத்து வைத்ததுடன், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்றை எடுத்து வந்து உடலின் பல இடங்களிலும் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷூக்கு அவரின் மனைவியே மருந்தும் போட்டு பராமரித்து வந்திருக்கிறார். இரண்டு நாட்களில் காயம் சிறிது ஆறிய நிலையில் நிஸாமாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மகேஷ், நடந்த விஷயங்களைச் சொல்லி மனைவி மீது புகார் அளித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

Published

on

women

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தகுதியான பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 கொடுக்கப்படும் என திமுக அரசு சொன்னது. சொன்னபடியே தற்போது அந்த திட்டம் நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசை பார்த்து தற்போது அண்டை மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் வைத்து பிரச்சாரங்கள் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசும் பெண்களுக்கு மாதா மாதம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியிருக்கிறது. 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவித்தொகையாக கொடுக்கப்படும் என அந்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில் இதை அறிவித்திருக்கிறார். மேலும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் மின்சார கட்டன்ணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதோடு, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை எனவும் அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

latest news

இந்தியாவில் 80 சதவீத கணக்கு வாத்தியார்களுக்கு இது தெரியவே தெரியாதாம்… வெளியான ஷாக் தகவல்!..

Published

on

By

பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ரொம்பவே கஷ்டமான பாடம் என்றால் கணிதம் தான். ஆனால் அந்த கணித ஆசிரியர்களே சொதப்பி இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது. 80 சதவீத ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியாது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவில் இருக்கும் 1300க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தியது. அது தொடர்ந்து அந்நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் 80 சதவீத கணித ஆசிரியர்களுக்கு இயற்கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லையாம். பெரும்பாலும் நான்காம் வகுப்பு கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் ஏழாம் வகுப்புகளின் கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதிலளித்தனர்.

ஜியோமெட்ரி குறித்த கேள்விகளின் அடிப்படைக்கு கூட 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறாக பதில் அளித்து இருக்கின்றனர். தசம எண்கள் குறித்த கேள்விகளை கூட சரியாக பதில் கொடுக்க முடியாமல் பல ஆசிரியர்கள் திணறி இருக்கின்றனர். இதுகுறித்த அறிக்கை தற்போது பெற்றோர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

google news
Continue Reading

Trending