latest news
ஆற்றல் குறைபாடுள்ளவர்களுக்கு அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்த ஆப்பிள்!
![Apple-accessibility-features - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features.jpg)
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் முற்றிலும் புதிய மென்பொருள் அம்சங்களை அறிவித்து இருக்கிறது. புதிய அம்சங்கள் பல்வேறு குறைபாடு கொண்டிருப்பவர்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சவால்களை எதிர்கொண்டு வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி, பயனரின் தனியுரிமையை பாதுகாத்து, அனைவருக்குமான சாதனங்களை வழங்க வேண்டும் என்ற ஆப்பிள் நிறுவன குறிக்கோளை வெளிப்படுத்தும் வகையில் புதிய அம்சங்கள் அமைந்திருக்கின்றன. அக்ஸசபிலிட்டியை மேம்படுத்தும் வகையில், ஆப்பிள் அறிமுகம் செயதிருக்கும் சில புதிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்காக அசிஸ்டிவ் அக்சஸ்
![Apple-accessibility-features-1 - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features-1-1024x614.jpg)
Apple-accessibility-features
அசிஸ்டிவ் அக்சஸ் (Assistive Access) திட்டத்தின் கீழ் அறிவாற்றல் குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் ஆப்ஸ் மற்றும் அனுபவங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது மக்கள் வழங்கிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் போன் மற்றும் ஃபேஸ்டைம், மெசேஜஸ், கேமரா, மியூசிக் உள்ளிட்டவை இயக்க அதிக காண்டிராஸ்ட் பட்டன்கள், அளவில் பெரிய எழுத்துக்கள், குறைபாடுள்ளவர்களின் நம்பத்தகுந்த உதவியாளர்களுக்கு விசேஷ டூல்கள் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவில் அம்சங்களை இயக்க விரும்புவோருக்காக சிறப்பான தோற்றத்தை வழங்க க்ரிட் (Grid) சார்ந்த லே-அவுட் அல்லது ரோ (Row) சார்ந்த லேஅவுட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
லைவ் ஸ்பீச் மற்றும் பெர்சனல் வாய்ஸ்
லைவ் ஸ்பீச் அம்சம் கொண்டு பயனர்கள் டைப் செய்யும் தகவல்கள் போன் அல்லது ஃபேஸ்டைம் அழைப்புகளில் குரல் வடிவில் சத்தமாக ஒலிக்கும். இந்த அம்சத்தினை பயனர்கள் மற்றவர்களிடம் நேரில் உரையாடும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதில் உபயோகிக்க, பயனர்கள் அடிக்கடி பயன்படுத்த நினைக்கும் வார்த்தைகளை தனியே சேமித்துக் கொள்ள முடியும்.
பெர்சனல் வாய்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் குரல் போன்றே கேட்க்கும் ஒலியை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த அம்சம் சாதனத்தில் உள்ள ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் கொண்டு பயனர் விவரங்களை தனிமைப்படுத்தி, பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. இந்த அம்சம் லைவ் ஸ்பீச் உடன் இணைந்து செயல்படுகிறது.
மேக்னிஃபயரின் டிடெக்ஷன் மோடில் பாயிண்ட் அண்ட் ஸ்பீக்
மேக்னிஃபயரில் (Magnifier) உள்ள பாயிண்ட் அண்ட் ஸ்பீக் அம்சம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் பொருட்களின் மீது எழுதப்பட்டு இருக்கும் சிறிய அளவிலான வார்த்தைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இது கேமரா ஆப், LiDAR ஸ்கேனர், ஆன்-டிவைஸ் மெஷின் லெர்னிங் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பயனர்கள் தொடும் பட்டன்களில் உள்ள எழுத்துக்களை எடுத்துரைக்கும். இதர மேக்னிஃபயர் அம்சங்களுடனும் சீராக இயங்கும். பயனர்களின் அருகில் இருக்கும் மக்கள், கதவுகள் மற்றும் படங்களை பற்றி எடுத்துரைக்கும்.
கூடுதல் அம்சங்கள்
![Apple-accessibility-features-2 - Cinereporters Info Apple-accessibility-features](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Apple-accessibility-features-2-1024x614.jpg)
Apple-accessibility-features
– காது கேட்கும் குறைபாடு உள்ள மேக் பயனர்கள் மேட் ஃபார் ஐபோன் ஹியரிங் சாதனங்களை தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப அட்ஜ்ஸட் செய்து கொள்ளலாம்.
– குரல் மூலம் டெக்ஸ்ட் எடிட் செய்வோர் சரியான வார்த்தையை பொனெடிக் பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஐபோன், ஐபேட் அல்லது மேக் சாதனங்களில் வாய்ஸ் கண்ட்ரோல் கைடு மூலம் டச் மற்றும் டைப்பிங்கிற்கு மாற்றாக எவ்வாறு வாய்ஸ் கமாண்ட்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
– ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள ஸ்விட்ச் கண்ட்ரோல் வசதியை கொண்டு எந்த ஸ்விட்சையும் விர்ச்சுவல் கேம் கண்ட்ரோலராக பயன்படுத்தி கேம்களை விளையாட முடியும்.
– பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஃபைண்டர், மெசேஜஸ், மெயில், காலெண்டர் மற்றும் நோட்ஸ் போன்ற மேக் (Mac) ஆப்களில் எழுத்துக்களின் அளவை தங்களது வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
– மெசேஜஸ் மற்றும் சஃபாரியில் குயிக் அனிமேஷன்களை விரும்பாதவர்கள் மோஷன், ஜிஃப் உள்ளிட்டவைகளை படமாக வைத்துக்கொள்ள முடியும்.
– வாய்ஸ்ஓவர் பயனர்கள் சிரி குரல்களை மிகவும் இயற்கையாக ஒலிக்க செய்யலாம். இத்துடன் சிரி எப்படி பேச வேண்டும் என்பதை சிரியின் பேச்சு வேகத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்கள் இந்த ஆண்டு இறுதியில் அனைவரின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
latest news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!
![amstrang - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/amstrang.jpg)
தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.
அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்
india
சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!
![ananth - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/ananth.jpg)
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.
latest news
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
![7 disticts - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/7-disticts.jpg)
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
![nirmala - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/nirmala.jpg)
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
india
மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!
![isro - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/isro.jpg)
ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.
இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news22 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news20 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!
-
Cricket2 days ago
ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி